தனது விடுதலை தொடர்பில் உதவிய அத்தனை உள்ளங்களுக்கு்ம் நன்றியை தெரிவித்துள்ளார் கமீர் நிசாம்தீன்
பயங்கரவாத குற்றச்சாட்டில் அவுஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்ட இலங்கைiயைச் சேர்ந்த கமீர் நிசாம்தீன் பிணையில் விடுதலை செய்யப்பட்டமை தொடர்பில் இலங்கை வாழ் பொதுமக்களுக்கு நன்றியை தெரிவித்துள்ளார்.
தனது விடுதலை குறித்து ..........
அவுஸ்திரேலியாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் ஸ்கந்தகுமார் லால் விக்ரமதுங்க மற்றும் பிரமுதிதா ஆகியோர் எனக்கு உறுதுணையாக இருந்து உதவியமைக்காக அவர்களுக்கு மிகவும் நன்றிகள்.
மேலும், இலங்கை வாழ் பொதுமக்கள் மற்றும் உயரதிகாரிகள் நான் குற்றமற்றவர் என நம்பியமைக்காகவும் நான் மனதார நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன். பெளத்த, கிறிஸ்தவ, இந்து மத குருமார்கள் மற்றும் இலங்கை ஊடகங்களுக்கும் எனது நன்றிகள்.
குறிப்பாக உண்மையான மற்றும் சரியான செய்திகளை வெளியிட்ட இலங்கை ஊடகங்களுக்கும், அத தெரண செய்தி சேவைக்கும் ஒரு மிகப் பெரிய நன்றிகள்.
கமீர் நிசாம்தீன் அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் வைத்து கடந்த ஆகஸ்ட் 30 ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.
பயங்கரவாத தாக்குதல்களுக்கான திட்டங்களைக் கொண்டுள்ளதாகவும், அது தொடர்பான ஆவணம் ஒன்று அவரிடம் இருந்துள்ளதாகவும் அந்த இளைஞர் மீது அவுஸ்திரேலிய பொலிஸார் குற்றம் சாட்டியிருந்தனர்.
sor/ad
தனது விடுதலை தொடர்பில் உதவிய அத்தனை உள்ளங்களுக்கு்ம் நன்றியை தெரிவித்துள்ளார் கமீர் நிசாம்தீன்
Reviewed by We Are Anonymous
on
செப்டம்பர் 29, 2018
Rating:

கருத்துகள் இல்லை: