Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

கொரோனா தடுக்கும் மனித நேயத்துக்கு பாடுபட்ட ஜனாதிபதி மாவட்டநிருவாகிகளுக்கு கிறிஸ்தவ சமூகம் மட்டக்களப்பு நகரில் பாராட்டி பதாகைகளை காட்சிப்படுத்தியுள்ளனர்.

கோவிட் 19 கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு மனிதநேயத்துக்கு பாடுபட்ட ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ மற்றும் வைத்தியநிபுணர்கள், தாதியர்கள், மருத்துவப் பணிப்பாளர்கள், மற்றும் மாவட்ட நிருவாகிகளுக்கு மட்டக்களப்பு மறைமாவட்ட கிறிஸ்தவவாழ்வு சமூகம் பாராட்டு தெரிவித்து மட்டக்களப்பு நகரின் பல இடங்களில் பாராட்டு பதாகைகளை காட்சிப்படுத்தியுள்ளனர



கோவிட் 19 கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு மனித நேயத்துக்கு பாடுபடும் முப்படையினர் பொலிஸ் அதிகாரிகள், தன்னார்வு நிறுவனங்கலின் தொண்டர்களுக்கும் இணைத்தே இந்த பாராட்டு இப்பதாகையில் விடுக்கப்பட்டுள்ளது. 



மட்டக்களப்பு மறைமாவட்ட கிறிஸ்தவவாழ்வு சமூகத்தின் ஆன்மீக இயக்குனர் அருட்தந்தை போல் சற்குணநாயகத்தின் தலைமையில் செயல்படும் ஆன்மீகக்குழுவினர் இந்த பாராட்டு பதாகைகளை இன்று 16  நகரின் பல இடங்களில் காட்சிப் படுத்தும் செயல்பாட்டில் ஈடுபாடுகாட்டினர்.



கொரோனா தடுக்கும் மனித நேயத்துக்கு பாடுபட்ட ஜனாதிபதி மாவட்டநிருவாகிகளுக்கு கிறிஸ்தவ சமூகம் மட்டக்களப்பு நகரில் பாராட்டி பதாகைகளை காட்சிப்படுத்தியுள்ளனர். Reviewed by www.lankanvoice.lk on ஏப்ரல் 17, 2020 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice Media Network © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.