Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

  

மதச் சுதந்திரத்தை மறுக்கும் கறுப்புப் பட்டியலில் இந்தியாவைச் சேர்க்க வேண்டும்



பிரதமர் நரேந்திர மோடியின் கடுமையான மதச்சுதந்திரம் கடுமையான வீழ்ச்சி கண்டுள்ள நிலையில் இந்தியாவை மதச் சுதந்திரத்துக்கான கறுப்புப் பட்டியலில் சேர்க்க வேண்டும் என அமெரிக்க ராஜாங்க குழுவொன்று கோரிக்கை விடுத்துள்ளது.செவ்வாயன்று வெளியிடப்பட்ட சர்வதேச மத சுதந்திரத்துக்கான அமெரிக்க ஆணையத்தின் (USCIRF)  வருடாந்த அறிக்கையில் இந்தியா தனது பதிவுகளை மேம்படுத்தாவிட்டால் பொருளாதாரத் தடைக்கு இட்டுச் செல்லும் “அவதானிக்கப்பட்டு வரும் நாடுகள்” பட்டியலில் இணைக்கப்படும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முஸ்லிம்களுக்கு எதிரான குடியுரிமைச் சட்டத்துக்கு அப்பால், பரந்த அளவில் மதச் சிறுபான்மையினரைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரு நகர்வை இந்தியா கொண்டுள்ளது என இன் துணைத் தலைவர் நடீன் மீன்ஸா குறிப்பிட்டார். 

இந்தியாவின் முக்கிய புள்ளிகளுக்கு விசா வழங்குவதை நிறுத்துதல், வெறுப்புப் பேச்சைக் கண்காணிக்கும் சிவில் நிறுவனங்களைப் பலப்படுத்தல் போன்ற தண்டனை நடவடிக்கைகளை இந்தியா மீது மேற்கொள்ள வேண்டும் எனவும் இந்த அறிக்கை பரிந்துரை செய்துள்ளது.sor/mp

மதச் சுதந்திரத்தை மறுக்கும் கறுப்புப் பட்டியலில் இந்தியாவைச் சேர்க்க வேண்டும் Reviewed by www.lankanvoice.lk on மே 03, 2020 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice Media Network © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.