Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இதுவரை 5546 பீ.சீ.ஆர் பரிசோதனைகள் நிறைவு

கொரோனா வைரஸ் தொற்று நாடுபூராகவும் 2 ஆயிரத்தி 700 ஐத் தாண்டியிருக்கின்ற நிலையில் கொரானா தொற்றினை உறுதிப்படுத்தும் பீ.சீ.ஆர் பரிசோதனைகள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இதுவரை 5 ஆயிரத்தி 546 மேற்கொள்ளப்பட்டுள்ளதாக போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் டாக்டர் திருமதி. கலாரஞ்சினி கனேசலிங்கம் அரசாங்க தகவல் திணைக்கள மாவட்ட ஊடகப் பிரிவிற்கு தகவல் தெரிவித்தார்.

இதுவரை மேற்கொள்ளப்பட்ட 5546 பீ.சீ.ஆர். பரிசோதனைகளில் 317 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதிப்படுத்தப் பட்டுள்ளதுடன் இந்நோய்தொற்று உறுதியானவர்கள் தனிமைப்படுத்தும் நிலையங்களில் இருந்து பரிசோனைக்காக மாதிரிகள் கொண்டுவரப்பட்டவையென அவர் மேலும் தெரிவித்தார்.

இதுதவிர இப்போதனா வைத்தியசாலையில் விசேடமாக ஆரம்பிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் பிரிவில் வைத்து கண்காணிக்கப்பட்ட நோயாளர்களில் மார்சுமாதம் 13 ஆந் திகதி தொடக்கம் 31 வரையான காலப்பகுதியில் 31 நோயளர்களில் 6 போர் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

மேலும் ஏப்ரல் மாதத்தில் 79 நோயாளர்களில் 2 பேரும், மே மாதத்தில் 70 நோயாளர்களில் 23 பேரும், ஜூன் மாதத்தில் 16 பேரில் ஒருவருமாக மொத்தம் 32 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் ஜூலை மாதம் 17ஆந் தகதிவரையான காலப்பகுதியில் 19 நோயாளர்களில் எவரும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இதுவரை 5546 பீ.சீ.ஆர் பரிசோதனைகள் நிறைவு Reviewed by www.lankanvoice.lk on ஜூலை 20, 2020 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice Media Network © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.