Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

கொரோனா எனும் கிருமி கொண்டு போனதோ உயிரை மரணம் வந்து மடியில் தின்று போனதோ இப்பயிரை


கொரோனாவினால்  மரணித்து
இன்று நல்லடக்கம் செய்யப்பட்ட
மர்ஹூம் கலீல் ஹாஜியாருக்காக
எழுதப்பட்டது . ( 05. 03 .2021 )


கொரோனா எனும் கிருமி
கொண்டு போனதோ உயிரை
மரணம் வந்து மடியில்
தின்று போனதோ இப்பயிரை
 
###
ஏழைகள்  துன்பம் துடைத்தீர்
ஏதேனும்  உதவிடத்  துடித்தீர்
காலையும்  மாலையும்  ஓடி
கொண்டு வந்தீர் உதவி தேடி.

###
மரணத்தில்  பலபேர் அழுகின்றார்.
மன்றாடி  தொழுதபின்  விழுகின்றார்.
சுவனத்தை  தரவேண்டும் கையேந்தி
துயரில்  கலக்கிறார்  மெய் ஏந்தி.

###
விளம்பரம்  இல்லா  சேவகனே
வெளிச்சம்  காட்டா  ஊர் மகனே
துலாம்பரமாகத்  தெரிகிறது
தூய  உம் பணி  மறைவின் பின் 

###
தீயும்  உம்மை  தீண்டவில்லை - அந்த
தீய சொல் காதை  தாண்டவில்லை.
ஈயும்  உனது  குணமறிந்து - அன்பின்
இறைவன்  அளித்தான் நற்பாக்கியத்தை.

###
நல்லடக்கம்  இன்று  நடக்கிறது
நலமாய்  மறுமை  அமையட்டும்
வல்லவன்  அல்லாஹ்  சுவனத்தை
வழங்கவே  மனதால் பிரார்த்திப்போம்.

கவிஞர்.ஏரூர் கே.நெளஷாத்

கொரோனா எனும் கிருமி கொண்டு போனதோ உயிரை மரணம் வந்து மடியில் தின்று போனதோ இப்பயிரை Reviewed by www.lankanvoice.lk on மார்ச் 05, 2021 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice Media Network © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.