மக்களுடம் இணைந்து கிளர்ச்சி செய்ய நேரிடும் - முருந்தெட்டுவே தேரர் எச்சரிக்கை
நாளாந்தம் நாட்டு மக்களின் அதிருப்தியை அரசாங்கம் அதிகரித்து வருவதால் உடனடியாக தலையிட்டு மக்கள் தேவை எதிர்பார்ப்புக்களை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு முருந்தெட்டுவே ஆனந்த தேரர் அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த அரசாங்கம் நாட்டுக்கு ஏதாவது செய்யும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் இருந்தது. ஆனால் இன்று மக்களுக்கு பதில் சொல்ல முடியாத நிலைக்கு தாம் தள்ளப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
வைத்தியர் அமல் ஹர்ச புன்னாக்கு கலவை செய்யும் தொழிலுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அனில் ஜயசிங்க புள்வெட்டும் இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.
இன்னும் சிலர் இடமாற்றம் செய்யப்படவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதென தேரர் குறிப்பிட்டுள்ளார்.
இப்படியான அரசாங்கம் ஒன்றை உருவாக்கவா பிக்குகள் தலையிட்டீர்கள் என மக்கள் கேள்வி கேட்பதாகவும் பதில் சொல்ல முடியவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்நிலை தொடர்ந்தால் நாட்டு மக்களுடன் இணைந்து பாரிய கிளர்ச்சிக்கு செல்ல வேண்டிய நிலை எமக்கும் ஏற்படும் என முருந்தெட்டுவே தேரர் தெரிவித்துள்ளார்.
மக்களுடம் இணைந்து கிளர்ச்சி செய்ய நேரிடும் - முருந்தெட்டுவே தேரர் எச்சரிக்கை
Reviewed by www.lankanvoice.lk
on
மார்ச் 10, 2021
Rating:

கருத்துகள் இல்லை: