Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

கொடுவாமடு ஏழைக்குடும்பத்திற்கு புதிய வீடு வழங்கி வைப்பு.

மட்டக்களப்பில் செயற்பட்டுவரும் உழைக்கும் மகளிர் அபிவிருத்தி நிறுவனத்தின் ஏற்பாட்டில் செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கொடுவாமடு கிராமத்தில் வசிக்கும் ஏழைக்குடும்பத்திற்கு புதிய வீடு அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. 

பெண்கள் எதிர் கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வுகளைப் பெற்றுக் கொடுக்க முன்நின்று செயற்படும் உழகை;கும் மகளிர் அபிவிருத்தி நிறுவனத்தின் ஏற்பாட்டில் கனடா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் வாழும் மக்களின் நிதிப்பங்களிப்பில் சுமார் 12 இலட்சம் செலவில் புதிய வீடொன்று அமைத்து கையளிக்கும் நிகழ்வு  (17) இடம்பெற்றுள்ளது.


அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் த. தயாபரன் மற்றும் அமைப்பின் மனிதாபிமான குழுமத்தினரின் பங்குபற்றுதலுடன் குறித்த வீடானது கொடுவாமடுவைச்சேர்ந்த திருமதி. ரஞ்சித்குமார் ஞானமலர் குடும்பத்தினரிடம் கையளிக்கப்பட்டது. 


இதன்போது உழைக்கும் மகளிர் அபிவிருத்தி நிறுவனத்தின் உறுப்பினர்கள், பயனாளியின் குடும்பத்தினர் மற்றும் கொடுவாமடு பிரதேச மக்கள் பலரும் பிரசன்னமாயிருந்தனர். 


கொடுவாமடு ஏழைக்குடும்பத்திற்கு புதிய வீடு வழங்கி வைப்பு. Reviewed by www.lankanvoice.lk on மார்ச் 18, 2021 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice Media Network © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.