பஸில் பதவியேற்ற நாளில் தயாசிறியின் கோட்டையில் கவிழ்ந்தது மொட்டு ஆட்சி!
பண்டுவஸ்நுவர பிரதேச சபையில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் 18 உறுப்பினர்களும், ஐக்கிய தேசியக்கட்சியின் சார்பில் 11 பேரும், ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சார்பில் ஏழு பேரும், ஜே.வி.பியின் சார்பில் ஒருவரும் அங்கம் வகிக்கின்றனர்.
பண்டுவஸ்நுவர பிரதேச சபைக்கு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் முன்மொழியப்பட்ட தவிசாளர் தோற்கடிக்கப்பட்டு, ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியால் பிரேரிக்கப்பட்ட வேட்பாளர் வெற்றிபெற்றுள்ளார்.
மேற்படி பிரதேச சபைக்கு புதிய தவிசாளரை தெரிவு செய்வதற்கான கூ
குருணாகல் மாவட்டத்தில் பண்டுவஸ்நுவர தேர்தல் தொகுதியானது ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகரவின் அரசியல் கோட்டையாகும். அத்தொகுதியிலேயே அவரின் வாக்குவங்கி தங்கியுள்ளது. சபையிலுள்ள சுதந்திர்கட்சி உறுப்பினர்கள் அவரின்சகாக்களாகும்.
மொட்டுகட்சியிலுள்ளவர்கள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்ணான்டோவின் சகாக்கள்.
தயாசிறி ஜயசேகரவை மொட்டு கட்சி உறுப்பினர்கள் கடுமையாக விமர்சித்துவருகின்றனர்.
இந்நிலையில் அவரின் கோட்டையில் மொட்டு கட்சி மண்கவ்வியமை அரசியல் பின்னடையாகவே பார்க்கப்படுகின்றது. அதுவும் பஸில் ராஜபக்ச நாடாளுமன்றம் வந்த நாளில் இவ்வாறு இடம் பெற்றுள்ளமை மொட்டு கட்சி ஆதரவாளர்களை சினம்கொள்ள வைத்துள்ளது என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகின்றது.kuru

கருத்துகள் இல்லை: