Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

தீன்வீதி அபிவிருத்தி வேலைகளின் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொள்ள காத்தான்குடி வருகின்றார் நீதியமைச்சர் அலிசப்ரி

மிக நீண்டகால மக்களின் கோரிக்கையாக முன்வைக்கப்பட்டு வந்த தீன்வீதி அபிவிருத்தி வேலைகள் நாளை (10/07/2021 சனிக்கிழமை) பி.ப.2.45 மணிக்கு அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்படவுள்ளன.

மட்டக்களப்புமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் பிரதேச அபிவிருத்திக்குழுத் தலைவருமான அல்ஹாபிழ் நஸீர் அஹமட் அவர்களிடம் இவ் தீன் வீதி அபிவிருத்தி செய்யப்பட வேண்டியதன் அவசியம் தொடர்பில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் முபீன் தொடராக வலியுறுத்தி வந்ததன் பேரில் பாராளுமன்ற உறுப்பினர் ஹாபிஸ் இவ்வேலைத்திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டை நெடுஞ்சாலைகள் வீதிஅபிவிருத்தி அமைச்சின் ஊடாக பெற்றிருந்தார்.

ரூபா பனிரெண்டு கோடியே எழுபத்தைந்து இலட்சம் செலவில் புனரமைக்கப் படவுள்ள இவ்வேலைத்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வில் பிரதம அதிதியாக நீதியமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான கெளரவ அலிசப்ரி அவர்கள் பாராளுமன்ற உறுப்பினர் ஹாபிஸ் நஸீர் அஹமட் அவர்களின் அழைப்பின் பேரில் கலந்து சிறப்பிக்கவுள்ளார்.

காத்தான்குடி நகர சபைத் தவிசாளர் SHM.அஸ்பர் jp, நகரசபை உறுப்பினர்கள் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் உயர் அதிகாரிகளும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

குறிப்பு:-கொரோனாதொற்று காரணமாக வரையறுக்கப்பட்ட மட்டுப்படுத்தப்பட்ட மிகச் சிறிய வைபவமாக இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தீன்வீதி அபிவிருத்தி வேலைகளின் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொள்ள காத்தான்குடி வருகின்றார் நீதியமைச்சர் அலிசப்ரி Reviewed by www.lankanvoice.lk on ஜூலை 09, 2021 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice Media Network © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.