அன்புப் பொதுமக்களுக்கு காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் விடுக்கும் முக்கிய அறிவித்தல்
السلام عليكم ورحمة الله وبركاته
கூட்டு உழ்ஹிய்யா - 2021
ஹஜ் வணக்க வழிபாடுகளில் உழ்ஹிய்யா கொடுப்பது பிரதான இடம் வகிக்கின்றது. இது நபிகளார் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களால் வலியுறுத்தப்பட்ட ஒரு முக்கியமான சுன்னத்தான அமலாகும். இதனால்தான் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் கூட்டு உழ்ஹிய்யா குழு கடந்த பல வருடங்களாக இக் கூட்டு உழ்ஹிய்யா திட்டத்தினை மிகச் சிறப்பாக மேற்கொண்டு வருகிறது 'அல்ஹம்துலில்லாஹ்'
அந்தவகையில் இவ்வருடம் கூட்டு உழ்ஹிய்யா எனும் அமலில் இணைந்துகொள்ள விரும்புபவர்கள் தனி மாடாகவோ அல்லது பங்குகளாகவோ தங்களது பங்களிப்புகளை வழங்கமுடியும்.
இதனடிப்படையில், ஒரு மாட்டிற்காக ரூபா 60,000/= உம், ஒரு பங்கிற்காக ரூபா 8,500/= உம் செலுத்தி இக் கூட்டு உழ்ஹிய்யா திட்டத்தில் இணைந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
மேலும், முன்கூட்டியே உழ்ஹிய்யாவுக்கான மாடுகளை கொள்வனவு செய்ய வேண்டியுள்ளதாலும்;, பெருநாளையடுத்து வருகின்ற நாள் போயா விடுமுறையாக காணப்படுவதாலும் தங்களது உழ்ஹிய்யா கொடுப்பனவுகளை முன்கூட்டியே சம்மேளன காரியாலயத்தில் ஒப்படைத்து பற்றுச்சீட்டைப் பெற்றுக்கொள்ளுமாறும், இத்திட்டம் சிறப்பாக நடைபெற ஒத்துழைப்பு வழங்குமாறும் அன்பாய் கேட்டுக்கொள்கின்றோம்.
جزاك الله خيرا
இவ்வண்ணம்.
தலைவர் / செயலாளர்
பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனம்
காத்தான்குடி.
அன்புப் பொதுமக்களுக்கு காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் விடுக்கும் முக்கிய அறிவித்தல்
Reviewed by www.lankanvoice.lk
on
ஜூலை 10, 2021
Rating:

கருத்துகள் இல்லை: