Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

காத்தான்குடி தீன்வீதிக்கான அடிக்கல் நடும் நிகழ்வு சிறப்பாக இடம் பெற்றது பிரதம அதிதியாக நீதியமைச்சர் அலிசப்ரி கலந்து கொண்டார்


காத்தான்குடி தீன்வீதிக்கான அடிக்கல் நடும் நிகழ்வு சிறப்பாக இடம் பெற்றது.


1620 மீட்டர் நீளம் கொண்ட காத்தான்குடி தீன்வீதிக்கான அபிவிருத்தி வேலைகள் இன்று (10/07/2021 சனிக்கிழமை) பி.ப.3.00 மணியழவில்  பிரதம அதிதி நீதியமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணியுமான  அலிசப்ரியினால் உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டன.


இன்றைய நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் முஸ்லிம் பிரதேச அபிவிருத்திக்குழுத் தலைவருமான அல்ஹாபிழ் நஸீர் அஹமட், காத்தான்குடி நகரபிதா அல்ஹாஜ் எஸ்.எச்.எம்.அஸ்பர் JP, பிரதி நகரமுதல்வர், நகரசபை உறுப்பினர்கள், காத்தான்குடி பிரதேச செயலாளர், காத்தான்குடி நகரசபை செயலாளர், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் அல்ஹாஜ் யு.எல்.என்.எம்.முபீன், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் உயர் அதிகாரிகள்,அரசியல் பிரமுகர்கள், ஆதரவாளர்கள், ஊடகவியலாளர்கள் என  பலரும் கலந்து கொண்டனர்..


மேலும் இவ்வேலைத்திட்டத்திற்காக பனிரெண்டு கோடியே எழுபத்தைந்து இலட்சம் ரூபாய்  நெடுஞ்சாலைகள் வீதி அபிவிருத்தி அமைச்சின் ஊடாக கிடைக்கப் பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவ்வீதி தொடர்பில் மக்கள் மிக நீண்ட காலமாக முகம் கொடுத்து வந்த பல்வேறு சிரமங்களுக்கு இன்று நிரந்தர தீர்வு கிடைக்கப் பெற்றுள்ள நிலையில் இதன் அபிவிருத்திப் பணிகளை குறித்த கொந்தராத்து தரப்பினர் மற்றும் பொறுப்பு வாய்ந்தவர்களும் மிகவும் அவசரமாகவும், மிகவும் சிறப்பாகவும் மேற்கொள்ள வேண்டும் என்பதே பிரதேச மக்களின்  எதிர்பார்ப்பாகும்.
ஊடகவியலளார்
ஏ.எல்.டீன் பைரூஸ்.



காத்தான்குடி தீன்வீதிக்கான அடிக்கல் நடும் நிகழ்வு சிறப்பாக இடம் பெற்றது பிரதம அதிதியாக நீதியமைச்சர் அலிசப்ரி கலந்து கொண்டார் Reviewed by www.lankanvoice.lk on ஜூலை 10, 2021 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice Media Network © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.