Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

நாட்டில் பால் மா தட்டுப்பாடு தொடர்ந்தும் நீடிக்கும் அபாயம் -இறக்குமதியாளர்கள் சங்கம்



இலங்கையில் பால் மாவுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு மேலும் ஒரு மாத காலப்பகுதிக்கு நீடிக்கும் அபாயம் உள்ளதாக பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

ஒரு கிலோ பால் மாவின் விலையை 200 ரூபாயில் அதிகரிக்க வாழ்க்கை செலவுக் குழுவிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் செவ்வாய்க்கிழமைக்குள் விலை உயர்வு ஏற்படவில்லை என்றால், பால் மா விநியோகம் இயல்பு நிலைக்கு திரும்புவதற்கு மேலும் ஒரு மாதமாகும் என பால்மா இறக்குமதியாளர்கள் சங்கத்தின் உறுப்பினர் லக்ஷ்மன் வீரசூரிய தெரிவித்துள்ளார்.

துறைமுகத்தில் உள்ள பால்மாவை விரைவில் விடுக்கவில்லை என்றால் விரைவில் பழுதடைவதற்கு வாய்ப்புகள் உள்ளது. தற்போது கடைகளில் பால்மா கோரிக்கைக்கமைய நூற்றுக்கு 10 வீதம் மாத்திரமே உள்ளதென பால்மா இறக்குமதியாளர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.

நாட்டில் பால் மா தட்டுப்பாடு தொடர்ந்தும் நீடிக்கும் அபாயம் -இறக்குமதியாளர்கள் சங்கம் Reviewed by www.lankanvoice.lk on செப்டம்பர் 26, 2021 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice Media Network © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.