முன்னாள் ஜனாதிபதி ஆர்.பிரேமதாச அவர்கள் புனித ஸ்தலங்களில் மதுபான சாலைகள் அமைக்க தடை செய்தார்.
செ.தி.பெருமாள்)
சிவனொளி பாத அடிவாரத்தில் உள்ள நல்லதண்ணி நகரில் ஏற்கனவே ஒரு வெளிநாட்டு உல்லாசப் பயணிகளுக்காக உள்நாட்டு வெளிநாட்டு மதுபான சாலை மறைந்த முன்னாள் அமைச்சர் அனுரபண்டா நாயக்க அவர்களின் சிபாரிசு மூலம் திறக்க பட்டது.
அவ்வாறு திறக்க பட்டு பல ஆண்டுகள் கடந்த பின்னர் இவ் தற்போதைய அமைச்சர் சிபாரிசின் பேரில் மேலும் பல உல்லாச விடுதிகளுக்கு பியர் விற்பனை செய்ய அனுமதி பத்திரம் வழங்க பட்டுள்ளது.
இதனால் புனித பூமி என்னும் கட்டுப்பாடு இல்லாமல் போய் விட்டது என அப் பகுதியில் உள்ள மக்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர் . குறிப்பாக அப் பகுதியில் உள்ள பெண்கள் மற்றும் மத குருமார்கள்.
முன்னாள் ஜனாதிபதி மறைந்த ஆர்.பிரேமதாச அவர்கள் நாட்டில் உள்ள அனைத்து வணக்கஸ் தலங்கள் அமைந்துள்ளது பகுதியில் மது பான சாலைகள் அமைக்க தடை செய்தார்.இந்த நிலை கடந்த அரசாங்கம் இருக்கும் வரை கடைபிடிக்க பட்டது.
தற்போது உள்ள ஜனாதிபதி ரனில் விக்கிரம சிங்க அவர்கள் தலைமையில் உள்ள இன்றைய அரசு இவ்வாறு பலருக்கு மது விற்பனை செய்ய அனுமதி பத்திரம் வழங்கி உள்ளது.
இதனால் புனித பூமி என்னும் பதம் இல்லாதது ஒழிக்க பட்டுள்ளது.இது வருந்த தக்க விடயம்.
இனி வரும் காலங்களில் யாத்திரிகர்கள் நல்லதண்ணி நகரில் போதையில் திரிவதை காண கூடியதாக இருக்கும்.
பியர் விற்பனை என்ற போர்வையில் ஏனைய போதைப் பொருள் விற்பனை செய்வதற்கு இன்றைய அரசு வழிகாட்டி உள்ளது.
இவ்வாறு இடம் பெறாமல் இருக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் கவணம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முன்னாள் ஜனாதிபதி ஆர்.பிரேமதாச அவர்கள் புனித ஸ்தலங்களில் மதுபான சாலைகள் அமைக்க தடை செய்தார்.
Reviewed by www.lankanvoice.lk
on
நவம்பர் 05, 2022
Rating:

கருத்துகள் இல்லை: