சிவனடி பாதமலை மலைக்கு வரும் யாத்திரிகர்கள் அதிக அளவில் குப்பைகள் வீசி விட்டு சென்று உள்ளனர்.
இம் மாதம் 7 ம் திகதி ஆரம்பிக்கப்பட்ட பருவ காலம் தொடர்ந்து 15 தினங்களில் சிவனடி பாதமலை அடிவாரம் முதல் உச்சி வரை உள்ள பகுதிகளில் பல பகுதிகளில் குப்பைகள் வீசி எறிந்து விட்டு யாத்திரிகள் சென்று உள்ளனர்.
இதனால் சுற்றுச்சூழல் மாசு அடையும்.
இது குறித்து சிவனடி பாத மலைக்கு பொறுப்பான பீடாதிபதி பெங்கமு தம்மதின்ன தேரர் ஆரம்ப காலத்தில் சகல அதிகாரிகளையும் ஒன்று இணைத்து கலந்து உரையாடல் செய்தார்.
அதன் படி சிவனடி பாதமலை மலைக்கு வரும் யாத்திரிகர்கள் எதிர் கால சந்ததிக்காக அபூர்வ மாக இருக்கும் இந்த மலைய நாம் பாதுகாக்க வேண்டும் ஆகையால் மலை உச்சியில் இருந்து அடிவாரம் வரை உள்ள பகுதிகளில் குப்பைகள் போடவோ வீசி எறியவோ வேண்டாம் எனவும் தரிசனம் செய்ய வரும் யாத்திரிகர்கள் மலைக்கு வரும் போது பிலாஸ்டிக் மற்றும் வெற்று போத்தல்கள் பொலித்தீன் குப்பைகள் போன்ற வற்றை எடுத்து வர வேண்டாம் என பத்திரிகை செய்திகள் மூலம் தெரிவித்தார்.
இருந்தும் ஒரு சில யாத்திரிகர்கள் இவ்வாறு குப்பைகள் வீசி எறிந்து விட்டு சென்றமை வேதனைக்கு உரியது என கூறினார்.
இனியும் இவ்வாறு செய்ய வேண்டாம் என மக்களுக்கு தெரியும் வகையில் பதாகைகள் பொருத்தப் பட்டுள்ளது.
மேலும் புனித யாத்திரை என்பதால் மது, கஞ்சா, போதைப்பொருள் தடை செய்யப்பட்டுள்ளது அவற்றை எடுத்து வரும் நபர்களை கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
சிவனடி பாதமலை மலைக்கு வரும் யாத்திரிகர்கள் அதிக அளவில் குப்பைகள் வீசி விட்டு சென்று உள்ளனர்.
Reviewed by www.lankanvoice.lk
on
டிசம்பர் 23, 2022
Rating:

கருத்துகள் இல்லை: