இன்று 6. ம் திகதி காலை மஸ்கெலியா பிரதேச சபை மற்றும் மஸ்கெலியா பொலிஸ் இனைந்து 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு டெங்கு ஒழிப்பு.
மஸ்கெலியா நிருபர்.செ.தி.பெருமாள்.
மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார அவர்களுடன் இணைந்து மஸ்கெலியா பிரதேச சபை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் இனைந்து 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நகரில் டெங்கு ஒழிப்பு பணியையும் சிறுவர் பூங்கா பகுதியில் மரக்கன்றுகள் நடும் பணி மேற்கொண்டனர்.
நிகழ்வில் மஸ்கெலியா நகர், நகரைச் சுற்றி உள்ள அனைத்து பகுதிகளிலும் டெங்கு ஒழிப்பு மேற் கொண்டனர்.அத்துடன் டெங்கு பரவாமல் தடுக்க விழிப்புணர்வு பிரதேச சபையின் அதிகாரி மேற்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து மஸ்கெலியா பிரதேச சபைக்கு உரித்தான நல்லதண்ணி நெடுஞ்சாலையில் உள்ள சிறுவர் பூங்கா பகுதியில் பழமரக் கன்றுகள் நாட்டும் வைபவம் இடம் பெற்றது இந்த நிகழ்வில் மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார மற்றும் உப அதிகாரிகள் பொலிசார் பிரதேச சபையின் அதிகாரி மேற்பார்வையாளர் கலந்து கொண்டனர்
இன்று 6. ம் திகதி காலை மஸ்கெலியா பிரதேச சபை மற்றும் மஸ்கெலியா பொலிஸ் இனைந்து 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு டெங்கு ஒழிப்பு.
Reviewed by www.lankanvoice.lk
on
பிப்ரவரி 06, 2023
Rating:
கருத்துகள் இல்லை: