நூறு அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்ததில் மூவர் பலி.
ஹரகம பிரதேசத்தில் இருந்து சிவனடி பாத மலைக்கு தரிசனம் செய்ய வந்து தரிசனம் முடித்து விட்டு திரும்பி செல்லும் வேளையில் நேற்று இரவு 9,15 மணியளவில் நோட்டன் தியகல பகுதிக்கு இடையே உள்ள பகுதியில் வீதியை விட்டு விலகி சுமார் நூறு அடி பள்ளத்தில் கவிழ்ந்து.
இதனால் பேருந்தில் பயணம் செய்த 30 பேர் படுகாயம் அடைந்த நிலையில் வட்டவளை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக நாவலப்பிட்டி ஆதார வைத்திய மற்றும் கன்டி போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல பட்டு உள்ளதாக நோட்டன் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
பேருந்து கவிழ்ந்த இடத்திலேயே இருவர் பெண்கள் மரணித்த நிலையில் வட்டவளை வைத்திய சாலையில் உள்ள பிரேத அறையில் வைக்கப்பட்டு உள்ளது எனவும் அனேகரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது எனவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.
நேற்று மாலை முதல் இன்று காலை வரையான காலப்பகுதியில் இப் பகுதியில் மழையுடனான காலநிலை தோன்றியுள்ளதுடன் மேக மூட்டம் அதிக அளவில் இப் பகுதியில் இருந்த வேளையில் இந்த வீதியில் பேருந்து சென்று உள்ளது எனவும் இதனால் இந்த விபத்து ஏற்பட்டது என அப் பகுதியில் உள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.

கருத்துகள் இல்லை: