இனவாத கருத்துக்கு எதிரான ஆர்பாட்டம் புத்தளத்தில்.
பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரனுக்கு எதிராக கண்டனம் தெரிவித்தும், வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் தொடர்பாக விஷேட ஜனாதிபதி ஆணைக்குழு அமைக்கப்பட வேண்டும்.
வடக்கில் அரச காணிகளை முஸ்லிம்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட வேண்டுமென்ற தொனிப் பொருளில்
கவனயீர்ப்பு போராட்டம் 10-3-2023 வெள்ளிக்கிழமை புத்தளம் கொழும்பு பிரதான வீதியில் ரத்மல்யாய பிரதேசத்தில் இடம் பெற்றது.
எக்ஸத் ஊடக வலையமைப்பும். பல வந்ததாக வெளியேற்றப் பட்ட அமைப்பும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.
மேற்படி கவனயீர்ப்பு போரட்டமானது
சமூக ஆர்வலர் சமூக மட்ட தலைவர்களின் பங்களிப்புடன் நடை பெற்றது.
கவனயீர்ப்பு போரட்டத்தில் கலந்து கொண்டோர் வடக்கில் தமிழ் முஸ்லிம் மக்களின் இன உறவை சீர்குலைக்காதே, வடக்கு முஸ்லிம்களின் அகதிவாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும்
வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்டு 32 வருடங்கள் கடந்த பின்பும் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றமும், அரச காணிகளை பகிர்ந்தளிக்கப்படவில்லை என கோசங்களை எழுப்பினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இனவாத கருத்துக்கு எதிரான ஆர்பாட்டம் புத்தளத்தில்.
Reviewed by www.lankanvoice.lk
on
மார்ச் 11, 2023
Rating:

கருத்துகள் இல்லை: