Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

பல்கலைக்கழகங்களில் போதைப்பொருளை தடுக்கும் நோக்கில் தேசிய குழுவொன்றை அமைக்க நடவடிக்கை

பல்கலைக்கழகங்களில் போதைப்பொருளை தடுக்கும் நோக்கில் தேசிய குழுவொன்றை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் கலாநிதி சுரேஷ் ராகவன்  தெரிவித்தார்.

இலங்கை பல்கலைக்கழகங்களில் கடந்த 12 மாதங்களில் 36 பகிடிவதைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதுடன், 57 மாணவர்கள் 8 மாதங்களுக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக, தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

“ஒரு துணைவேந்தர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் தாக்கப்படும் அளவுக்கு இந்த புற்றுநோய் பரவியுள்ளது. ஒரு தேசமாக நாம் வெட்கப்பட வேண்டும். இவர்களின் வன்முறையை கொள்கையாக ஏற்றுக்கொண்ட கட்சிகள் இந்த நாவலை தொடர்ந்து நடத்தும் என்பதற்கு போதுமான ஆதாரங்கள் உள்ளன.

 இதனைத் தடுக்க ஜனாதிபதி, பிரதமர், கல்வி அமைச்சர் உள்ளிட்டோர் செயற்பட்டு வருவதாகவும் திரு.சுரேஷ் ராகவன் தெரிவித்தார்.

பல்கலைக்கழகங்களில் போதைப்பொருளை தடுக்கும் நோக்கில் தேசிய குழுவொன்றை அமைக்க நடவடிக்கை Reviewed by www.lankanvoice.lk on செப்டம்பர் 19, 2023 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice Media Network © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.