காத்தான்குடி கோட்டமட்ட சிறுவர் மெய்வல்லுனர் விளையாட்டு விழா கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஹக்கீம் தலைமையில் சிறப்பாக இடம் பெற்றது.
காத்தான்குடி கோட்டக்கல்வி அலுவலகத்தின் ஏற்பாட்டினில் சிறுவர் மெய் வல்லுனர் விளையாட்டு விழா (11.09.2023 திங்கள்)
காத்தான்குடி கோட்டக் கல்விப் பணிப்பாளர் AGM. ஹக்கீம் (SLEAS) தலைமையில் காத்தான்குடி மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) மைதானத்தில் மிகவும் சிறப்பாக இடம் பெற்றது.
மேற்படி விளையாட்டு விழாவில் காத்தான்குடி கோட்டத்தின் கீழுள்ள பல பாடசாலைகள் பங்கு பற்றிய துடன் தரம் 3,4,5 மாணவர்களின் நிகழ்வுகள் அன்றைய தினம் மிகவும் சிறப்பாக இடம் பெற்றது.
இதன் போது மாணவர்கள் தங்கள் திறமைகளை திறமையுடன் வெளிக்காட்டிய துடன் பல மாணவர்கள் வலயமட்டத்திற்கும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர் என்பதும் பாராட்டத்தக்கது.
மேற்படி நிகழ்வின் போது அதிகமான பாடசாலைகள் பல பிரிவுகளிலும் முதலாம், இடண்டாம், மூன்றாம் இடங்களைப் பெற்றுக் கொண்டமை விசேட அம்சமாகும்.
மேற்படி நிகழ்வின் அதிகளாக ஓய்வு பெற்ற முன்னாள் காத்தான்குடி கோட்டக் கல்வி அதிகாரி, ஆசிரியர் ஆலோசகர்கள், உதவி கல்விப் பணி ப்பாளர்கள், அதிபர்கள், பிரதி அதிபர்கள், ஆசியர்கள், ஆரம்ப பிரிவு ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் பயிற்றுவிப்பாளர் என பலரும் கலந்து கொண்டு நிகழ்வினை சிறப்பித்தனர்.
மேலும் கல்விசாரா ஊழியர்கள், முகாமைத்துவ உதவியாளர்கள், மாண வர்கள் என பலரின் பங்கு பற்றுதலுடன் விழா மிகவும் சிறப்பாக இடம் பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஊடகவியலாளர்
ஏ.எல்.டீன் பைரூஸ்
காத்தான்குடி கோட்டமட்ட சிறுவர் மெய்வல்லுனர் விளையாட்டு விழா கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஹக்கீம் தலைமையில் சிறப்பாக இடம் பெற்றது.
Reviewed by www.lankanvoice.lk
on
செப்டம்பர் 13, 2023
Rating:

கருத்துகள் இல்லை: