நிலநடுக்கம் மற்றும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மொரோக்கோ மற்றும் லிபிய மக்களுக்கு கொழும்பில் விஷேட துஆப்பிரார்த்தனை !
(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
இந்நிகழ்வு கொழும்பு தெவட்டகஹ அஷ்-ஷெய்க் உஸ்மான் வலியுல்லாஹ் ஜும்ஆப் பள்ளிவாசலில் நேற்று (15) வெள்ளிக்கிழமை நடை பெற்றது.
பள்ளிவாசல் தலைவர் அல்-ஹாஜ் ரியாஸ் சாலி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்,
காயிப் ஜனாஸா தொழுகையை சங்கைக்குரிய அல்-ஹாஜ் அஸ்-ஸெய்யத் அப்துல் கரீம் தங்கள் அல்-ஐய்துரூஸி அவர்கள் நடாத்தியதுடன் விஷேட துஆ பிரார்த்தனையை அல்-ஹாஜ் அஸ்-ஸெய்யத் கலாநிதி ஹஸன் மௌலனா அல்-காதிரி நிகழ்த்தினார்.
இந்நிகழ்வில் ஸாதாத்மார்கள், உலமாக்கள், பள்ளிவாசல் நிர்வாகிகள், புத்திஜீவிகள் உட்பட பெரும் திரளான பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
நிலநடுக்கம் மற்றும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மொரோக்கோ மற்றும் லிபிய மக்களுக்கு கொழும்பில் விஷேட துஆப்பிரார்த்தனை !
Reviewed by www.lankanvoice.lk
on
செப்டம்பர் 16, 2023
Rating:

கருத்துகள் இல்லை: