ரபீஉனில் அவ்வல் மாதத்தை முன்னிட்டு மஸ்ஜித்களில் ‘ஷமாஇலுத் திர்மிதி" காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா தீர்மாணம்.
ரபீஉனில் அவ்வல் மாதத்தை முன்னிட்டு மஸ்ஜித்களில் ‘ஷமாஇலுத் திர்மிதியை’ (நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வர்ணனைகள்) மக்கள் மயப்படுத்துவது தொடர்பான அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் அறிவித்தலுக்கு அமைய காத்தான்குடி பிரதேச ஜும்ஆப் பள்ளிவாயல் இமாம்களுடனான விஷேட கலந்துரையாடல் 14.09.2023 வியாழக்கிழமை இரவு 8.00 மணிக்கு ஜம்இய்யா மண்டபத்தில் நடைபெற்றது.
நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது ஸீராவை வாசிப்பதில் மக்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்துவதும் அவர்களது ஸுன்னாவை அன்றாட வாழ்க்கையில் நடைமுறைப் படுத்துவதில் விருப்பத்தை உண்டுபண்ணுவதும் அவர்கள் மீதான அன்பை உள்ளங்களில் அதிகரிப்பதற்கான முயற்சிகளை மேற் கொள்வதும் எமது கடமையும் காலத்தின் தேவையுமாகும்.
அந்தவகையில் எதிர்வரும் 19.09.2023 ஞாயிற்றுக்கிழமை தொடக்கம் 26.09.2023 சொவ்வாய்க்கிழமை வரை மேற்படி விடயத்தை காத்தான்குடி பிரதேசத்திலுள்ள 28 ஜும்ஆப் பள்ளிவாயல்களிலும் முதலாவது நாள் 30 நிமிடங்களும் ஏனைய நாட்களில் 10 நிமிடங்களுக்கு அமுல் படுத்துவது எனவும் 27.09.2023 புதன்கிழமை மெத்தைப் பெரிய ஜும்ஆப் பள்ளிவாயல், புதிய காத்தான்குடி பெரிய ஜும்ஆப் பள்ளிவாயல், பூனொச்சிமுனை முகைதீன் ஜும்ஆப் பள்ளிவாயல், மஞ்சந்தொடுவாய் ஹிழ்ர் ஜும்ஆப் பள்ளிவாயல், பாலமுனை நடுவோடை மீரா பெரிய ஜும்ஆப் பள்ளிவாயல், காங்கேயனோடை முகைதீன் ஜும்ஆப் பள்ளிவாயல் ஆகியவற்றில் விஷேட மகாநாடு ஜம்இய்யாவினால் நடாத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
அத்துடன் மேற்கூறப்பட்ட காலப்பகுதிக்குள் பெண்களுக்கான விஷேட பயான் நிகழ்வுகளை இரு தினங்களுக்கு நடாத்துவதாகவும் ஆலோசனை செய்யப்பட்டது.
விருப்பமான பள்ளிவாயல்கள் ரபீஉனில் அவ்வல் மாதம் முழுவதும் மேற்கூறப்பட்ட விடயத்தை நடாத்த முடியும் எனவும் அனுமதி வழங்கப்பட்டது.
ஊடகப் பிரிவு:
அகில இலங்கை ஜம் இய்யதுல் உலமா காத்தான்குடி கிளை
ரபீஉனில் அவ்வல் மாதத்தை முன்னிட்டு மஸ்ஜித்களில் ‘ஷமாஇலுத் திர்மிதி" காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா தீர்மாணம்.
Reviewed by www.lankanvoice.lk
on
செப்டம்பர் 15, 2023
Rating:

கருத்துகள் இல்லை: