காத்தான்குடி மண்ணிலிருந்து காசா சிறுவர் நிதியத்திற்கு நிதிப் பங்களிப்பு.
காத்தான்குடி மண்ணிலிருந்து காசா சிறுவர் நிதியத்திற்கு நிதிப்பங்களிப்பு செய்யப்பட்டுள்ளது.
இலங்கையின் அதிமேதகு ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்கவினால் அண்மையில் ஆரம்பித்து வைக்கப்பட்ட "Children of Gaza Fund Donation" காசா சிறுவர் நிதியத்திற்கு நாட்டின் பல அமைப்புகளிடமிருந்தும் நிதிப் பங்களிப்பு செய்யப்பட்டு வருகின்ற நிலையில் காத்தான்குடி மண்ணிலிருந்தும்
காத்தான்குடி சிறுவர் அபிவிருத்தி நிலையத்தினால் ("Mulim Orpharge Welfare Movement Kattankudy") ரூபா ஒரு இலட்சம் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.
மேலும் இந்த நிதியினை
காத்தான்குடி சிறுவர் அபிவிருத்தி நிலையத்தின் தலைவர் அல்ஹாஜ் எம்.ஐ.எம்.உபைத் அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டன.
புதிய காத்தான்குடி பெரிய ஜும்மா பள்ளிவாயல் (அல் அக்சா) மஸ்ஜிதில் இடம் பெற்ற நிகழ்வின் போது முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் தினைக்களத்தின் உத்தி யோகஸ்தர் M.பைசளிடம் இந்நிதி கையளிக்கப்பட்டது.
(ஏ.எல்.டீன் பைரூஸ் )
காத்தான்குடி மண்ணிலிருந்து காசா சிறுவர் நிதியத்திற்கு நிதிப் பங்களிப்பு.
Reviewed by www.lankanvoice.lk
on
மார்ச் 29, 2024
Rating:
கருத்துகள் இல்லை: