யுக்திய நடவடிக்கையால் சிக்கிய குற்றவாளிகளின் எண்ணிக்கை 2000 ஆக உயர்ந்துள்ளது.
நாட்டில் விசேட சுற்றிவளைப்புடன் இணைந்து நாடளாவிய ரீதியில் 20 விஷேட பொலிஸ் குழுக்களை ஈடுபடுத்திய நடவடிக்கையில் கைது செய்யப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினர்களின் எண்ணிக்கை 2000ஐத் தாண்டியுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இந்தக் குழு 19.03.2024 முதல் 04.07.2024 வரையிலான காலப்பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட 2078 உறுப்பினர்களில், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களை நேரடியாக ஆதரித்தவர்கள், குற்றத்தை திட்டமிட்டவர்கள், குற்றத்திற்கு உதவியவர்கள் உட்பட பல்வேறு வழிகளில் குற்றத்தை ஆதரித்தவர்கள் உள்ளதாக பொலிஸ் தலைமையகம் கூறுகிறது.
கொழும்பு குற்றப்பிரிவு, மாத்தறை குற்றப்பிரிவு, மேல் மாகாண (வடக்கு) குற்றப்பிரிவு, மேல் மாகாண (தெற்கு) குற்றப்பிரிவு ஆகியன இந்த சந்தேக நபர்களை தடுப்புக்காவல் உத்தரவின் பேரில் விசாரிக்கத் தொடங்கியுள்ளன.
யுக்திய நடவடிக்கையால் சிக்கிய குற்றவாளிகளின் எண்ணிக்கை 2000 ஆக உயர்ந்துள்ளது.
Reviewed by www.lankanvoice.lk
on
ஜூலை 07, 2024
Rating:

கருத்துகள் இல்லை: