Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

முன்னாள் ஜனாதிபதிகள் உட்பட 30 முன்னாள் எம்.பிக்கள் தேர்தலில் போட்டியிடவில்லை!

 

9ஆவது நாடாளுமன்றத்தில் அங்கம் வகித்த உறுப்பினர்களில் சுமார் 30 பேர்வரை நாடாளுமன்ற அரசியலுக்கு விடைகொடுத்துள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, முன்னாள் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, சமல் ராஜபக்ச, ஜோன் செனவிரத்ன, வாசுதேவ நாணயக்கார ஆகியோரே இந்த முடிவை எடுத்துள்ளனர்.

பந்துல குணவர்தன, காமினி லொக்குகே, வினோநோதராதலிங்கம், சார்ள்ஸ் நிர்மலநாதன், சிவி விக்னேஸ்வரன், சிசிர ஜயக்கொடி, விஜயதாச ராஜபக்ச உள்ளிட்டவர்கள் இம்முறை பொதுத்தேர்தலில் போட்டியிடாதிருக்க தீர்மானித்துள்ளனர்.

தேசியப்பட்டியல் ஊடாக சபைக்குவந்த திஸ்ஸ விதாரண, ஜீ.எஸ்.பீரிஸ், தம்மிக்க பெரேரா, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அலிசப்ரி உள்ளிட்டவர்களும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை.

இவ்வாறு சுமார் முன்னாள் 30 எம்.பிக்கள்வரை பொதுத்தேர்தலில் களமிறங்கவில்லை எனத் தெரியவருகின்றது.

முன்னாள் ஜனாதிபதிகள் உட்பட 30 முன்னாள் எம்.பிக்கள் தேர்தலில் போட்டியிடவில்லை! Reviewed by www.lankanvoice.lk on அக்டோபர் 07, 2024 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice Media Network © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.