எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் என்ன செய்யப் போகிறோம்....?
அன்பின் நண்பர்களே...
நாட்டின் முக்கியமான காலகட்டத்திலே அரச கட்டமைப்பின் முக்கிய பிரிவுகளில் ஒன்றான நாட்டின் சட்டத்துறையை தீர்மானிக்கின்ற பாராளுமன்றத் தேர்தலில் நாம் எல்லோரும் வாக்களிக்க இருக்கிறோம் .
இந்த தேர்தலில் எவ்வாறு வாக்களிப்பது...?
யாரை தெரிவு செய்வது...?
என்ற வினாக்கள் இன்றைய காலகட்டங்களில் மிக முக்கியமாக வினாக்களாக மாறி உள்ளன.
நாட்டின் அரசாங்க முறையில் முக்கிய மூன்று துறைகள் காணப்படுகின்றன.
1) நிர்வாக துறை
2) சட்டத்துறை
3) நீதித்துறை
இலங்கை நாட்டின் அரசியல் யாப்பின்படி நிர்வாகத் துறைக்கு வேறாகவும் சட்டத்துறைக்கு வேறாகவும் தேர்தல் நடத்தப்பட்டு அதற்குரிய பொறுப்புகள் வழங்கப்படுகின்றன.
கடந்த செப்டம்பர் மாதத்தில் நாட்டின் நிர்வாக துறையை நாம் தெரிவு செய்து விட்டோம் .நிர்வாகத்துறை சிறப்பாக செயல்படுவதற்கு
சிறந்த சட்டத்துறை அவசியமாக காணப்படுகிறது .
ஜனாதிபதியின் தலைமையிலான நிர்வாகத்துறை சீராக சிறப்பாக செயற்பட சட்டத்துறையின் வகிபாகம் மிகவும் முக்கியமானது.
#.நாட்டுக்கான அமைச்சரவை உருவாக்குதல்.
#.கொள்கைகளை உருவாக்குதல்.
#.நாட்டுக்காக சட்டங்களை உருவாகுதல்.
சட்டம்,நிர்வாகம்,நீதித் துறைகளுக்கான நிதி அதிகாரத்தை விடுவித்தால்
உள்ளிட்ட முக்கிய அதிகாரங்கள் சட்டத்துறைக்கே காணப்படுகின்றன.
அத்தோடு நிர்வாக துறையின் உப பிரிவான பிரதமர் தலைமையிலான மந்திரி சபை சட்டத்துறையின் பாராளுமன்ற அதிகார பெரும்பான்மையை வைத்தே தெரிவு செய்யப்படும். .
எனவே நிறைவேற்றுத் துறையான ஜனாதிபதியை தெரிவு செய்த நாம் அந்த நிறைவேற்றுத் துறை சீராகவும் சிறப்பாகவும் செயற்படுவதற்கான சட்டத்துறையை தற்போது பாராளுமன்றத் தேர்தலில் வாக்களித்து தெரிவு செய்ய இருக்கிறோம்.
நாங்கள் நினைக்கின்ற System Change உருவாவதற்கு
#.ஊழல் ஒழிக்கப்படுவதற்கு
#.துஷ்பிரயோகங்கள் தடுக்கப்படுவதற்கு
#.நாட்டில் நல்லாட்சி மலர்வதற்கு
மீண்டும் இனவாதம் தோன்றாமல் நாட்டிலே நல்லிணக்கம் ஏற்படுவதற்கு
சட்டத்துறை ஜனாதிபதியோடு மிக நெருக்கமாக இணைந்து பணியாற்றுவதில் தான் தங்கியுள்ளது.
எனவே சட்ட துறையை ஒரு கையிலும் நிர்வாகத் துறையை இன்னொரு கையிலும் வழங்கினால் நாட்டிலே மக்களுக்கான நல்லாட்சி மலராது.
அரசியல் குழப்பங்களும் குத்துவெட்டுக்களும் குழிபறிப்புகளும் ஏற்படவே வாய்ப்புகள் உருவாகும்.
எனவே எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் மக்கள் மீது மிக முக்கிய கடமை ஒன்று இருக்கிறது.
ஜனாதிபதியை தெரிவு செய்த நாம் அந்த ஜனாதிபதி சிறப்பாக செயற்படுவதற்கான அரசாங்கச் சூழ்நிலையை உருவாக்குவது மக்களின் கைகளிலேயே தங்கி உள்ளது .
இம்முறை கடந்த காலங்களில் நமக்கு தெரிந்தவர்
நம்முடைய நண்பர்
நமது வீட்டுக்கு வருபவர்
நமது இன்ப துன்பங்களில் பங்கு பெறுபவர்
தெரிஞ்சா ஆள் என்று வாக்களித்த நிலைமைகள் மீண்டும் நடக்குமாக இருந்தால் மீண்டும் இந்த நாடு குட்டிசுவராகவே மாற நாங்கள் எல்லோரும் காரணமாக அமைந்து விடுவோம்.
எனவே நாட்டின்
நல்லாட்சியை ஏற்படுவதற்கு
சிறந்த கொள்கைகள் உருவாகுவதற்கு
சிறந்த சட்டங்கள் உருவாகுவதற்கு
ஊழல் ஒழிக்கப்படுவதற்கு
லஞ்சம் மறைவதற்கு
அதிகாரிகள் தங்கள் கடமையை வினைத்திறமையுடன் கடமை ஆற்றுவதற்கு
ஜனாதிபதி அனுபகுமார அவர்களின் கரங்களை பலப்படுத்தக்கூடிய பாராளுமன்றத்தை அவருக்கு நாங்கள் கொடுக்க வேண்டிய மிகப் பெரிய கடமை எங்களுக்கு உள்ளது .
எனவே கடந்த காலங்களில் மடத்தனமாக வாக்களித்த நிலைமைகளிலிருந்து மாறி இம்முறை நாட்டுக்காகவும் நமது எதிர்கால சந்ததிக்காகவும் வாக்களிப்போம்.
அன்புடன்
யூ எல் எம் என் முபின்
முன்னாள் நகர சபை தலைவர் காத்தான்குடி.
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் என்ன செய்யப் போகிறோம்....?
Reviewed by www.lankanvoice.lk
on
அக்டோபர் 05, 2024
Rating:

கருத்துகள் இல்லை: