மட்டக்களப்பு மத்தி வலய சிறுவர் தின நிகழ்வு காத்தான்குடி ஹிஸ்புல்லா மண்டபத்தில் சிறப்பாக இடம் பெற்றது.
(ஏ.எல்.டீன் பைரூஸ்)
மட்டக்களப்பு மத்தி வலயம் மூன்று கோட்டங்களைச் சேர்ந்த மாணவர்களின் பங்கு பற்றுதலுடன் சிறுவர் தின நிகழ்வு காத்தான்குடி கோட்டக் கல்விப் பணிப்பாளர் AGM.ஹக்கீம் தலைமையில் காத்தான்குடி ஹிஸ்புல்லா மண்டபத்தில் (01.10.24) சிறப்பாக இடம் பெற்றது.
நிகழ்வின் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப் பணிப்பாளர் அஷ்ஷேஹ் MM.ஜவாத்(நழீமி) கலந்து சிறப்பித்ததுடன், உதவிக் கல்விப் பணிப்பாளர்கள்,கல்வி அதிகாரிகள்,அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
மேலும் மாணவச் செல்வங்களின் கலை நிகழ்வுகள் பல இடம் பெற்றதுடன் கலந்து கொண்ட 400க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கிவைக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பு மத்தி வலய சிறுவர் தின நிகழ்வு காத்தான்குடி ஹிஸ்புல்லா மண்டபத்தில் சிறப்பாக இடம் பெற்றது.
Reviewed by www.lankanvoice.lk
on
அக்டோபர் 05, 2024
Rating:

கருத்துகள் இல்லை: