Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

அரசமைப்பது தொடர்பில் எவர் வேண்டுமானாலும் எம்முடன் பேச்சு நடத்தலாம்

பொதுத்தேர்தலுக்கு பிறகு எம்முடன் இணைந்து ஆட்சி அமைப்பது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (தமிழரசுக் கட்சி) உள்ளிட்ட தரப்புகள் எம்முடன் பேச்சு நடத்தலாம் என்று தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் லால்காந்த தெரிவித்தார்.

பொதுத்தேர்தலின் பின்னர் ஆட்சியமைப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (தமிழரசுக் கட்சி), தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளிக்க முன்வந்தால் அது தொடர்பில் தங்கள் தரப்பு நிலைப்பாடு என்னவாக இருக்கும் என எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிந்த லால் காந்த கூறியவை வருமாறு,

“அவர்கள் (கூட்டமைப்பினர்) எம்முடன் கலந்துரையாடும் விடயங்கள் எவை என்பது பற்றி பரிசீலிக்க வேண்டும், அவற்றுக்கு நாம் இணங்குகின்றோமா அல்லது இல்லையா என்பது பற்றியும் கவனம் செலுத்தப்பட வேண்டும்.

எவர் வேண்டுமானாலும் எம்முடன் பேச்சு நடத்தலாம். ஆனால் அவர்கள் முன்வைக்கும் கோரிக்கைகள் எவை, மக்களுக்கு வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றுவதற்கு அவை தடையாக உள்ளனவா, எமது கொள்கைகளுடன் ஒத்துபோகின்றனவா என்பன உள்ளிட்ட விடயங்கள் ஆராய்ந்த பின்னரே அது தொடர்பில் முடிவெடுக்கப்படும்.” – என்றார் லால்காந்த

அரசமைப்பது தொடர்பில் எவர் வேண்டுமானாலும் எம்முடன் பேச்சு நடத்தலாம் Reviewed by www.lankanvoice.lk on அக்டோபர் 05, 2024 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice Media Network © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.