மட்டக்களப்பு மாவட்டம் சிங்கள மொழி பாடநெறியின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு
அரசாங்கத்தினால் அரச உத்தியோகத்தர்களின் மொழித்துறையை விருத்தி செய்யும் நோக்கில் அரச மொழிகள் திணைக்களத்தினால் மொழிப்பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றது.
இதனடிப்படையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரதேச செயலகங்களில் தமிழ்மொழி மூலம் கடமை புரியும் உத்தியோகத்தர்களின் சிங்கள மொழித்துறையை விருத்தி செய்யும் நோக்கில் அரச மொழிகள் திணைக்களத்தினால் (150 மணித்தியாலயம்) சிங்களப் பயிற்சியைப் பூர்த்தி செய்த கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு 23.10.2024 புதன்கிழமை அன்று பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
கோறளைப் பற்று தெற்கு பிரதேச செயலாளர் கே.சித்திரவேல் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், பிரதம அதிதியாக 232 காலாற்படையின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் ஆர்.பி.எஸ்.பிரசாத் அவர்களும் கௌரவ அதிதியாக அரச கரும மொழிகள் திணைக்களத்தின் சிரேஷ்ட போதனாசிரியர் எம்.எம்.செயினுதீன் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
சிறப்பு அதிதிகளாக சந்திவெளி பொலிஸ் நிலைய உப பொலிஸ் பரிசோதகர் எம்.எம்.ரசாக், கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.சிவனேசராசா,நிர்வாக உத்தியோகத்தர் கே.கருணாநிதி, மாவட்ட மொழி விருத்தி உத்தியோகத்தர் வீ.சந்திரகுமார்,அரச கரும மொழிகள் திணைக்களத்தின் போதனாசிரியர்களான எம்.ஐ.பாரூக், ஏ.கே.எம்.றிம்ஸான் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலகத்தைச்சேர்ந்த உத்தியோகத்தர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட 59 அரச உத்தியோகத்தர்கள் இப்பாடநெறியைப் பூர்த்தி செய்துள்ளதுடன், அவர்களது கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றதுடன், அதிதிகளுக்கு ஏற்பாட்டாளர்களால் நினைவுச் சின்னமும் வழங்கப்பட்டது.
குறித்த சிங்கள பாடநெறியினை அரச கரும மொழிகள் திணைக்களத்தின் சிரேஷ்ட போதனாசிரியர் சிங்கள/தமிழ் மொழி பயிற்றுவிப்பாளரான எம்.எம்.செயினுதீன் திறம்பட நடாத்தி முடித்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: