காத்தான்குடி மெத்தைப்பள்ளி வித்தியாலய மாணவன் பிரதமர் ஹரிணியிடம் பரிசும் சான்றிதழும் பெற்றுக் கொண்டார்.
கல்வி விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சு, சுகாதார அமைச்சு, தேசிய அபாயகரமான மருந்து கட்டுப்பாட்டு சபை, கொழும்பு திட்டம், டயலொக் ஆக்சியாடா ஆகியன இணைந்து 2024 ஆம் ஆண்டு நடாத்திய அகில இலங்கை வரைபடங்கள் போட்டித் தொடரில் எமது பாடசாலையில் தரம் 11 இல் கல்வி பயிலும் சிரேஷ்ட மாணவத் தலைவன் MHM.ஹகீல் அகில இலங்கை ரீதியாக மூன்றாம் இடத்தைப் பெற்றுக் கொண்டார்.
அவருக்கான பரிசளிப்பு வைபவம் கொழும்பில் உள்ள கடற்படை தலைமைக் காரியாலயத்தில் (2024.11.29) வெள்ளிக்கிழமை இடம் பெற்றது.
இதன் போது பெறுமதியான சான்றிதழ் மற்றும் ரூபாய் 20,000 யிற்கான காசோலையும் பிரதம அதிதியாக கலந்து கொண்ட பிரதமர் கெளரவ கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிட்டத்தக்கது.
இவ் வெற்றியை ஈட்டித் தந்த பாடசாலை மாணவருக்கும் அதனை நெறிப்படுத்திய பொறுப்பாசிரியர் திருமதி MSF.ஷீனா ஆசிரியை அவர்களுக்கும் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழு மற்றும் பழைய மாணவர் சங்கம் சார்பாக வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
-பாடசாலை நிருவாகம் -
காத்தான்குடி மெத்தைப்பள்ளி வித்தியாலய மாணவன் பிரதமர் ஹரிணியிடம் பரிசும் சான்றிதழும் பெற்றுக் கொண்டார்.
Reviewed by www.lankanvoice.lk
on
நவம்பர் 30, 2024
Rating:

கருத்துகள் இல்லை: