Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

அலி ஸாஹிர் மௌலாவினால் ஏறாவூர் ஆதார வைத்தியசாலையின் சிறுவர் விடுதிக்கு மருந்து பொருட்கள் அன்பளிப்பு


சீரற்ற காலநிலை நிலவும் வேளை சிறுவர்கள் மத்தியில் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல் - முன் ஆயத்த பணிகளுக்காக அலி ஸாஹிர் மௌலானா அவர்களால் ஏறாவூர் ஆதார வைத்தியசாலையின் சிறுவர் விடுதிக்கு மருந்து பொருட்கள் அன்பளிப்பு.

கடந்த சில நாட்களாக சீரற்ற காலநிலை காரணமாக மழை ,வெள்ளத்திற்கு மத்தியில் தொற்று நோய்களும் பரவும் துர்ப்பாக்கிய சூழல் காணப்படுவதால் அதனை கட்டுப்படுத்தும் பொருட்டு ஏறாவூர் ஆதார வைத்தியசாலை அவசிய மருந்து பற்றாக்குறை சீரடையும் வரை சுமார் 3 மாதங்களுக்கு போதுமான குறை நிவர்த்திக்கும் சிறுவர்க்கக்கான அவசிய மருந்துப் பொருட்கள் அலி சாஹிர் மௌலானா அவர்களால் அன்பளிப்பு செய்யப்பட்டது .


அதிக மழை, வெள்ளம் புயல் எச்சரிக்கை காரணமாக பல்வேறு அசௌகரியங்களை மக்கள் எதிர்கொண்டு வரும் நிலையில் அதற்காக தன்னால் இயலுமான ஏற்பாடுகளை அலி சாஹிர் மௌலானா அவர்கள் வழமை போன்று களத்தில் முன்னெடுத்து வருகிறார்கள் ,
இந்த இடர் காலத்தில் மக்களின் நலன் பேணும் வகையில் வெள்ள நீரை வழிந்தோட செய்யும் நடவடிக்கைக்கான வாகன ஆளணி பங்களிப்பு , பாதிக்கப்பட்ட மக்களுக்கான நாளாந்த 3 நேர உணவு ஏற்பாடு என களத்தில் நின்று செயற்பட்டதுடன் அதற்கு மேலதிகமாக அனர்த்த செயற்பாடுகளில் ஒரு அங்கமாக சிறுவர்கள் மத்தியில் தற்போது வேகமாக பரவும் ஒரு வகை வைரஸ் காய்ச்சலை கட்டுப்படுத்தவும் மற்றும் முன் ஆயத்த பணிகளுக்காகவும் , தற்போது சிறுவர்கள் மத்தியில் பரவும் வைரஸ் காய்ச்சல் தொடர்பான நிலை பற்றியும் குறிப்பாக வைத்தியசாலையின் சிறுவர் விடுதியில் நிலவும் மருந்து குறைபாடு தொடர்பில் அவராகவே வைத்தியசாலை தரப்பை கேட்டறிந்த போது 2 மருந்துகளுக்கு நிலவும் தட்டுப்பாடு தொடர்பிலும் அதிக பாவனையில் உள்ள அந்த மருந்துகளை கடந்த சில நாட்களாக நோயாளிகளே கொள்வனவு செய்வதாகவும் விரைவில் அவை சுகாதார அமைச்சின் மூலம் கிடைக்கலாம் என்றும் தெரிவித்தனர் ,


அமைச்சின் ஊடாக மருந்துகள் வந்து கிடைக்கும் வரை எமது மக்கள் இந்த இயற்கை இடர் காலத்தில் எந்த அசௌகரியங்களையும் சுமைகளையும் குறிப்பாக அரச வைத்தியசாலைகளை நம்பி வரும் ஏழைகள் அடைய தேவை இல்லை என சொற்ப நேரத்திற்குள் ஏறாவூர் ஆதார வைத்தியசாலையின் சிறுவர் விடுதிக்கு அடுத்து வரும் 3 மாதங்கள் குறைபாடின்றி பாவிக்க கூடிய அவசிய மருந்துகளை குறிப்பாக Cetrizine Syrup ,
Theophylline syrup போன்றவற்றை குறை நிவர்த்துக்கும் வகையில் தனது சொந்த நிதியில் கொள்வனவு செய்து இன்று மாலை ஏறாவூர் வைத்தியசாலையின் நிருவாகம் சார்பில் வைத்தியர் Dr பிர்னாஸ் மற்றும் சிப்லி , சிறுவர் விடுதிக்கான தாதிய உத்தியோகத்தர் அடங்கிய குழுவிடம் கையளிப்பு செய்தார் ,

இதன்போது குறித்த அனர்த்த கால களப்பணிகளை ஒழுங்கமைத்து செயற்படுத்தும் அம்ஜத் மௌலானா அவர்களும் கலந்து கொண்டார் -

ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் வரலாற்றில் அரசியல் ரீதியாக பல்வேறு பாரிய அபிவிருத்தி பணிகளை அலி ஸாஹிர் மௌலானா அவர்கள் முன்னெடுத்து வந்தாலும் தனிப்பட்ட ரீதியில் காலத்தின் தேவை கருதி அவர் செய்தவை என்றும் மக்கள் மனதினில் நிலைத்து நிற்கும் குறிப்பாக கடந்த கொவிட் காலத்தில் எமது பகுதி நோயாளர்கள் நலன் கருதி தனிப்பட்ட ரீதியில் அமைக்கப்பட்ட கோவிட் சிகிச்சை பிரிவு மற்றும் தற்காலிக ஆரம்ப சிகிச்சை பிரிவு என்பன வினைத்திறன் மிக்க பணிகளாகும் .
அலி ஸாஹிர் மௌலாவினால் ஏறாவூர் ஆதார வைத்தியசாலையின் சிறுவர் விடுதிக்கு மருந்து பொருட்கள் அன்பளிப்பு Reviewed by www.lankanvoice.lk on நவம்பர் 30, 2024 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice Media Network © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.