தொழில் வாண்மைய்யாளர் மற்றும் சிவில் அமைப்புகளின் ஒன்றியத்தின் களப்பயணம்.
காத்தான்குடி, ஆரயம்பதி, மஞ்சந்தொடுவாய், பூநொச்சிமுனை, கர்பலா, பாலமுனை ஆகிய பிரதேசங்கள் அடிக்கடி வெள்ள பாதிப்புக்கு உள்ளாகி அதன் தாக்கங்கள் அதிகரித்து வருவதை ஆராய்வதற்காக
தொழில் வாண்மைய்யாளர் மற்றும் சிவில் அமைப்புகளின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் ஜப்பான் நாட்டின் Graduates institute for police studies பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் A.W.M.ரஷ்மி தலைமையிலான நிபுணர் குழு மேற்படி பிரதேசங்களுக்கு சென்று களஆய்வில் ஈடுபட்டது.
சென்ற 15/02/2025 பிற்பகல் 2:30 மணி தொடக்கம் மாலை
6.00மணி வரை காத்தான்குடி மற்றும் ஆரையம்பதி மண்முனை வடக்கு ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கு உட்பட்ட வெள்ளத்தால் பாதிப்படையும் பிரதேசங்களை பார்வையிட்டதுடன் நீர் வழிந்து ஓடுவதற்கான மார்க்கங்களையும் கண்டறிவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டனர்.
தொழில் வான்மையாளர் மற்றும் சிவில் அமைப்புகளின் தவிசாளர் U.L.M.N.முபீனின்
ஏற்பாட்டில் சாராஓடை,பெரியதோனா,சின்னத் தோணா, 1.சின்னத் தோணா. 2.நாவக்குடா பெரிய தோனா,
ஏத்துக்கால்,
பொழுதுலைக்கேணி,
திருநூற்றுக்கேணி,
கர்பலா, கீரித்தோணா
ஆகிய நீரேந்துப் பகுதிகளுக்கு நிபுணர் குழுவினர் விஜயம் செய்து நிலைமைகளை ஆராய்ந்தனர்.
காத்தான்குடி வடக்கு எல்லையிலும் தெற்கு எல்லையிலும் தோணாக்கள் அடைக்கப்பட்டு இருப்பதை விசேடமாக பார்வையிட்டதுடன் பொது மக்களோடும் கலந்துரையாடினர்.
மேற்படி களப்பயணத்தில் ஜப்பான் நாட்டின் Graduates institute of policy studies நிபுணர்களான
Dr.Thanahoowa Phd,
Dr.BathriSirestha.Phd, மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் .Dr.MNM.நிஹாஜ்.Phd, தொழில் வான்மெய்யாளர் மற்றும் சிவில் அமைப்புகளின் செயலாளர் நாயகம் சிரேஷ்ட தொழில் நுட்பவியலாளர் M.M.நழீம், நிதி விடயங்களுக்கான பணிப்பாளர் மட்டக்களப்பு மாவட்ட விளையாட்டு அபிவிருத்தி மேம்பாட்டு உத்தியோகத்தர்
M.Y.ஆதம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேற்படி நிபுணர்களை அழைத்துச் செல்வதற்காக வாகன ஒழுங்குகளையும் செய்து தந்து வாகனத்தையும் செலுத்தி எங்களுக்கு பெரும் உதவி புரிந்த
Litro Gas நிறுவன
உரிமையாளர் எம்.ஐ.எம்.சாவாகீர் ஹாஜியார் அவர்களுக்கு தொழில்வான்மையாளர் மற்றும் சிவில் அமைப்புகளின் ஒன்றியம் மனம் நிறைந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறது.
இறுதியாக காத்தான்குடி கடற்கரையில் நம் ஊரின் காவாவை மிக ரசித்து நிபுணர் குழுவினர் ருசித்ததோடு அதற்கு மிகுந்த பாராட்டை தவ்பீக் மௌலவிக்கு தெரிவித்தனர்.
ஊடகப்பிரிவு,
தொழில் வாண்மையாளர் மற்றும் சிவில் அமைப்புகளின் ஒன்றியம்.
தொழில் வாண்மைய்யாளர் மற்றும் சிவில் அமைப்புகளின் ஒன்றியத்தின் களப்பயணம்.
Reviewed by www.lankanvoice.lk
on
பிப்ரவரி 16, 2025
Rating:

கருத்துகள் இல்லை: