மட்டக்களப்பில் "ஏட்டுலா கனவாக்கம்" அமைப்பின் இரட்டை நூல் வெளியீடு விழா வெற்றிகரமாக நிறைவு
மட்டக்களப்பு ஓட்டமாவடி பிரதேசத்தை சேர்ந்த இளம்எழுத்தாளர்களான பாத்திமா ஹகீமா அமீனுதீன் எழுதிய “என்னைத்தேடாதீர்கள்” மற்றும் அதீனா அபூ உபைதாஎழுதிய“நிசப்த வியாக்கியானம்” எனும் இரு கவிதை நூல் வெளியீட்டு விழா 2025 நவம்பர் 02ஆம் திகதி
ஞாயிற்றுக்கிழமை ஓட்டமாவடி மத்திய கல்லூரி பிரதான மண்டபத்தில் ஏட்டுலா கனவாக்கம்
அமைப்பின் நிர்வாக குழுஉறுப்பினரும்,ஜே.எம்.ஐ.நிருவனத்தின் பணிப்பாளருமான ஜே.எம்.ஐ.இஹ்சான் தலைமையில் வெகுவிமர்சையாக நடைபெற்றது.
வருபவருமான இலக்கிய செயற்பாட்டாளர் ஆஷிக் ஹுசைன் அவர்களை பணிப்பாளராக கொண்டு இலைமறை காய்களாய் இருக்கும் சிந்தனைத்திறன் மிக்க எழுத்தாளர்களின் புத்தகக் கனவை நனவாக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட
“ஏட்டுலா கனவாக்கம்” அமைப்பின் இரட்டை நூலாக இது வெளியீடு செய்யப்பட்டது.
உலாவரக் காத்துநிற்கும்
படைப்புகளைகோர்த்து புத்தகமாக்கும் ஓர் முயற்சி” எனும் தொனிப்பொருள் தாங்கிய இந்நிகழ்வில் பிரதம அதிதியாக இலங்கை தென்கிழக்கு
பல்கலைக் கழகம் முகாமைத்துவ பீடம், கணக்கியல் பேராசிரியர் கலாநிதி. எம்.சி.ஏ. நாஸர் PhD (NUM, மலேசியா)LLB (OUSL)அவர்களும், சிறப்பு அதிதியாக இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகம்
சிரேஷ்ட
விரிவுரையாளர்,
கலாநிதி. எப்.எச்.ஏ. ஷிப்லி ஹஸன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
நூலாசிரியர்களின் குடும்பத்தினர்கள் என பெரும் திரளானோர் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பில் "ஏட்டுலா கனவாக்கம்" அமைப்பின் இரட்டை நூல் வெளியீடு விழா வெற்றிகரமாக நிறைவு
Reviewed by www.lankanvoice.lk
on
நவம்பர் 04, 2025
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
நவம்பர் 04, 2025
Rating:
























கருத்துகள் இல்லை: