Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

மட்டக்களப்பில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவது தொடர்பான விசேட கலந்துரையாடல்

மட்டக்களப்பில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கான உயர் மட்ட அதிகாரிகளுடனான விசேட கலந்துரையாடல் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தவிசாளர் புத்திக்க ஹேமவசம் அவர்களின் பங்குபற்றுதலுடன் பழைய மாவட்ட செயலக மண்டபத்தில்  (18) இடம் பெற்றது.

மாவட்டத்தில் உள்ள 14 பிரதேச செயளாலர் பிரிவில் உள்ள தனித்துவமான சுற்றுலாத் தலங்களை உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவர்வதற்காக நவீன மயப்படுத்தப்பட்ட செயற்திட்டங்களின் மூலம் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் தொடர்பாக இதன் போது விரிவாக கலந்துரையாடப்பட்டது.

சமூக மட்டத்தில் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என இதன் போது சுட்டிக்காட்டப்பட்டதுடன் உள்ளூர் மட்ட விமான சேவைகளை மீள் ஆரம்பிப்பதற்கான கலந்துரையாடலானது இடம் பெறவுள்ளது.

சுற்றுலா அபிவிருத்தி வேலைத்திட்டங்களை மேற்கொள்ளும் போது எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பாக இதன் போது கருத்துகளை பகிர்ந்துகொண்டனர்.

இந் நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் நவரூப ரஞ்ஜினி முகுத்தன் (காணி), பிரதேச செயலாளர்கள், பிரதி திட்டமிடல் பணிப்பாளர்களான ரி.நிர்மலன், வி.நவநீதன், மாவட்ட சுற்றுலாத் துறை அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.ஏ.விவேகானந்தராஜ், கிழக்குமாகண சுற்றுலா பணியகத்தின் பணிப்பாளர் சுரேஷ் ரொபர்ட் என பலர் கலந்து கொண்டனர்.

மட்டக்களப்பில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவது தொடர்பான விசேட கலந்துரையாடல் Reviewed by www.lankanvoice.lk on ஜூன் 21, 2025 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice Media Network © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.