Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

"பொல் தெஸதிய" விசேட திட்டம் நாடு முழுவதும் செயல்படுத்தப்படும்..

தெங்கு செய்கையை சேதப்படுத்தும் வெள்ளை ஈ, கருப்பு வண்டு, சிவப்பு வண்டு மற்றும் பூச்சிகளைக் கட்டுப்படுத்தவும், தெங்கு செய்கை தொடர்பான தொழில்நுட்ப அறிவை விவசாயிகளுக்கு வழங்கவும் "பொல் தெஸதிய" என்ற விசேட திட்டத்தை நாடு முழுவதும் செயல்படுத்த தெங்கு பயிர்ச்செய்கை சபை திட்டமிட்டுள்ளது.

இதன் முன்னோடித் திட்டத்தின் முதல் கட்டம் (ஜூலை 14) இன்று முதல் 31 ஆம் திகதி வரை யாழ்ப்பாண மாவட்டத்தை மையமாகக் கொண்டு செயல்படுத்தப்படுகின்றது. மேலும் அதன் ஆரம்ப நிகழ்வு இன்று (14) யாழ்ப்பாணம், கொடிகாமத்தில் ஆரம்பித்து வைக்கப்ட்டது.

இந்தத் திட்டம் யாழ்ப்பாண மாவட்டத்தில் சாவகச்சேரி, கோப்பாய், உந்துவில், நல்லூர் மற்றும் யாழ்ப்பாணத்தை உள்ளடக்கியதாக செயல்படுத்தப்படும்.

"பொல் தெஸதிய" விசேட திட்டம் நாடு முழுவதும் செயல்படுத்தப்படும்.. Reviewed by www.lankanvoice.lk on ஜூலை 14, 2025 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice Media Network © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.