Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

காத்தான்குடி பஸ்லா பர்ஸான் எழுதிய "புரிந்து தெளிக" சிறப்புக் கவிதை


இறுகிய மனம்
குறுகிய எண்ணம்
சறுக்கவே செய்திடும்
சிறாத்தல் முஸ்தகீனிலே

*
பேணுதல் இல்லாத
கோணுதல் வாழ்வு
நாணுமே ஓர்நாள்
நாளை மஹ்ஷரிலே

*
நற்குணம் குன்றிய
கற்குண மனிதர்கள்
பற்றிய பாவத்தினால்
பற்றியெரிவரே நரகிலே

*
ஹராத்திலே தேடிய
கீராத்தளவு செல்வங்கள்
பாரத்தைக் கூட்டுமா
பரிசுத்த மீஸானிலே

*
பட்டங்கள் பதவிகள்
கொட்டங்கள் எல்லாம்
எட்டிடச் செய்யுமா
பட்டோலையை வலக்கரத்திலே

*
சூழ்நிலை புரிந்து
ஆழ்ந்து தெளிந்தால்
தாழ்ந்து போகாது
தம்நிலை மறுமையிலே

(பஸ்லா பர்ஸான்
காத்தான்குடி)
காத்தான்குடி பஸ்லா பர்ஸான் எழுதிய "புரிந்து தெளிக" சிறப்புக் கவிதை Reviewed by www.lankanvoice.lk on செப்டம்பர் 25, 2025 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice Media Network © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.