இலங்கை இராணுவத்தின் 76வது ஆண்டு நிறைவு
இலங்கை இராணுவத்தின் 76வது ஆண்டு நிறைவு.
நாடு முழுவதும் மத அனுஷ்டானங்கள் இடம் பெறவுள்ளன.
தாய் நாட்டுக்கான உயிர் நீத்த அனைத்து ரானுவ வீரா்களுக்கும் இரங்களை தெரிவித்துக் கொள்வதுடன் தற்போது நாட்டுக்காக பெரும் அர்ப்பணிப்புடன் பணியாற்றி வரும் ரானுவ வீரா்கள் அனைவருக்கும் லங்கள்வொய்ஸ் ஊடக வலையமைப்பு சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
76 வது இராணுவ ஆண்டு நிறைவை முன்னிட்டு 2025 ஒக்டோபர் 08 ஆம் திகதி பத்தரமுல்ல போர்வீரர்கள் நினைவுத்தூபியில் வீரமரணமடைந்த போர்வீரர்களின் மகத்தான தியாகங்களை கௌரவிக்கும் வகையில் ஒரு கௌரவ விழா நடைபெற்றது.
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார்.
இராணுவத் தளபதியின் வருகையின் பின்னர், தேசிய கீதம் மற்றும் இராணுவ பாடல் ஒலிக்கப்பட்டதை தொடர்ந்து உயிர்நீத்த போர் வீரர்களை கௌரவிக்கும் வகையில் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
அன்றைய பிரதம அதிதி, பல சிரேஷ்ட இராணுவ அதிகாரிகளுடன் இணைந்து, போர்வீரர்களின் நினைவுத் தூபிக்குச் சென்று தேசத்திற்காக உயிர்நீத்த போர் வீரர்களின் நினைவு தூபிக்கு மலர் வளையம் வைத்து வணக்கம் செலுத்தினர்.
அதைத் தொடர்ந்து, இராணுவ சம்பிரதாயத்திற்கு இணங்க, போர் வீரர்களின் நினைவைப் போற்றும் இராணுவத்தின் இறுதி பியுகல் மற்றும் 'ரெவில்' வாசிக்கப்பட்டதுடன் நிகழ்வுகள் நிறைவடைந்தன.
பிரதி இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் வை.ஏபி.எம் யஹாம்பத் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ, இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் தளபதி மேஜர் ஜெனரல் கே.வீ.என்.பீ பிரேமரத்ன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ, முதன்மை பணி நிலை அதிகாரிகள், பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதிகள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் வீரமரணமடைந்த போர் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக கலந்து கொண்டனர்..

கருத்துகள் இல்லை: