Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

எதிர் வரும் மாகாணசபைத் தேர்தலிலும் என்.பி.பி. வெற்றிநடை அமைச்சர் சுனில் வட்டகல!

மாகாணசபைத் தேர்தலில் 9 மாகாண சபைகளிலும் தேசிய மக்கள் சக்தி வெற்றிநடைபோடும் என்று பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்தார்.

தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போது மாகாணசபைத் தேர்தல் சம்பந்தமாக எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

” நாடாளுமன்றத்தில் சலுகைகள் கிடைக்காததால் எதிரணி எம்.பிக்கள் சிலர், பதவி துறந்துவிட்டு முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடுவதற்கு முற்படுகின்றனர். இது அவர்களுக்குள்ள உரிமை. அதனை நாம் சவாலுக்குட்படுத்தவில்லை.

எதிரணிகள் ஒன்று சேர்ந்து போட்டியிட்டால்கூட எமக்கு சவால் இல்லை. 9 சபைகளிலும் தேசிய மக்கள் சக்தி வெற்றிபெறும்.” எனவும் சுனில் வட்டகல தெரிவித்தார்.

எதிர் வரும் மாகாணசபைத் தேர்தலிலும் என்.பி.பி. வெற்றிநடை அமைச்சர் சுனில் வட்டகல! Reviewed by www.lankanvoice.lk on அக்டோபர் 29, 2025 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice Media Network © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.