ஜம்இய்யத்துல் உலமா காத்தான்குடி கிளையின் ஏற்பாட்டில் இரு நிகழ்வுகள் இடம் பெற்றன!
இளைஞர்களுக்கான ஒரு மாத கால தலைமைத்துவ சான்றிதழ் பயிற்சி நெறியின் 04ஆம் தொகுதியினருக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு.
மற்றொரு நிகழ்வாக முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் ஜனாப் MBM. பைறூஸ் அவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு.
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா காத்தான்குடி கிளையின் இளைஞர் விவகார பிரிவின் ஊடாக தொடராக நடைபெற்று வரும் இளைஞர்களுக்கான தலைமைத்துவ ஒரு மாத கால சான்றிதழ் பயிற்சி நெறியின் 04ஆம் தொகுதியினருக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் ஜனாப் MBM.பைறூஸ் அவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வும் (19.10.2025) ஞாயிற்றுக்கிழமை இரவு 8.00 மணிக்கு காத்தான்குடி ஜம்இய்யத்துல் உலமா மண்டபத்தில் தலைவர் அஷ் ஷேய்க் AM.ஹாரூன் (ரஷாதி) தலைமையில் இடம்பெற்றது.
சபையோரின் கிறாஅத்துடன் ஆரம்பமான இந்நிகழ்வில் தலைமை உரையையும் வரவேற்புரையும் ஜம்இய்யாவின் தலைவர் வழங்கியதுடன் நிகழ்வுகளை ஜம்இய்யாவின் செயலாளர் அஷ் ஷேய்க் MIM. ஜவாஹிர் (பலாஹி)BA அவர்கள் தொகுத்து வழங்கினார்கள்.
அதனைத் தொடர்ந்து இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்த முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் ஜனாப் MBM. பைறூஸ் அவர்களின் பிரதம அதிதி உரை நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து ஜம்இய்யாவின் பொருளாளர் AGM.ஜலீல் (மதனி) அவர்களினால் நன்றியுரை வழங்கப்பட்டது.
நிகழ்வின் இறுதி அங்கமான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வும் அதனைத் தொடர்ந்து முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவராக தெரிவு செய்யப்பட்ட ஜனாப் MBM. பைறூஸ் அவர்களை கௌரவித்து ஜம்இய்யாவினால் நினைவுச் சின்னம் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா காத்தான்குடி கிளை நிறைவேற்று குழு உறுப்பினர்கள், காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன பிரதிநிதிகள்,ஜம்இய்யாவின் ஆலோசகர்கள் மற்றும் மாணவர்கள் மாணவர்களின் பெற்றோர்கள் உலமாக்கள் ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
(ஊடகப் பிரிவு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா காத்தான்குடி கிளை.
ஜம்இய்யத்துல் உலமா காத்தான்குடி கிளையின் ஏற்பாட்டில் இரு நிகழ்வுகள் இடம் பெற்றன!
Reviewed by www.lankanvoice.lk
on
அக்டோபர் 19, 2025
Rating:

கருத்துகள் இல்லை: