இலங்கை மற்றும் சவுதி அரேபியா நாடுகளுக்கு இடையிலான கூட்டு வணிக மன்ற தொடக்க நிகழ்வில் அமைச்சர் விஜித ஹேரத் பங்கேற்பு
சவுதி அரேபியா
ரியாத்தில் உள்ள சவுதி சம்மேளனகங்களின் கூட்டமைப்பின் (FSC) தலைமையகத்தில், சவுதி அரேபியா வர்த்தக சம்மேளனங்களின் கூட்டமைப்பு (FSC) மற்றும் இலங்கை வர்த்தக மற்றும் தொழிற்துறை சம்மேளனங்களின் கூட்டமைப்பு (SLFCC) ஆகியவற்றுக்கு இடையேயான வரலாற்றுச் சிறப்புமிக்க இலங்கை - சவுதி அரேபியா கூட்டு வணிக மன்ற தொடக்க நிகழ்வு (11) நடைபெற்றது மேற்படி நிகழ்வில் அமைச்சர் விஜித ஹேரத் கலந்துகொண்டார்.
இலங்கையில் வர்த்தகம் மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை எடுத்துரைத்து சவுதி அரேபியா சம்மேளனக் கூட்டமைப்பிலும் அமைச்சர் உரையாற்றினார்.
கூட்டத்தில் மெய்நிகர் முறையில் இணைந்த சவுதி அரேபியா வர்த்தக சம்மேளனங்களின் கூட்டமைப்பின் தலைவர் ஹசன் அல்-ஹுவைசி மற்றும் இலங்கை வர்த்தக மற்றும் தொழில்துறை சபைகளின் தலைவர் கீர்த்தி குணவர்தன ஆகியோர் வணிக சபையை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
சவுதி அரேபியா இராச்சியத்திற்கான இலங்கை தூதர் அமீர் அஜ்வத் மற்றும் சவுதி வர்த்தக சபைகளின் தலைவர் ஹசன் அல்-ஹுவைசி ஆகியோர் கைச்சாத்திட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை பரிமாறிக்கொண்டனர்.
இது இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட முதல் வணிகணங்களுக்கிடையிலான மன்றமாவதுடன், இரு நாடுகளுக்கும் இடையிலான மிகவும் தேவையான தனியார் துறை தொடர்புகளை மேம்படுத்துவதற்கான ஒரு ஊக்கியாக செயற்படும் என்றும் தெரிவித்தனர்.
இலங்கை மற்றும் சவுதி அரேபியா நாடுகளுக்கு இடையிலான கூட்டு வணிக மன்ற தொடக்க நிகழ்வில் அமைச்சர் விஜித ஹேரத் பங்கேற்பு
Reviewed by www.lankanvoice.lk
on
நவம்பர் 13, 2025
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
நவம்பர் 13, 2025
Rating:



கருத்துகள் இல்லை: