Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பணிகள் குறித்து அரச சார்பற்ற அமைப்புகளின் பிரதிநிதிகளுடனான சந்திப்பில் ஜனாதிபதி

 
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பணிகள் குறித்து இன்று (29) இரவு முப்படை பாதுகாப்பு தலைமையகத்தில் அரச சார்பற்ற அமைப்புகளின் பிரதிநிதிகளுடனான சந்திப்பில் ஜனாதிபதி கலந்து கொண்டார்.



பாதிக்கப்பட்டவர்களின் மீட்பு நடவடிக்கைகளை அரசாங்கம் முப்படைகளின் ஆதரவுடன் தொடர்ந்து மேற்கொண்டு வருவதாகவும் இடம்பெயர்ந்தவர்களுக்கு தேவையான வசதிகளை வழங்குதல், மீண்டும் இயல்பு வாழ்வை மீட்டெடுத்தல் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் ஆகியவைகளில் அனைவரும் பங்களிப்பதற்கான சாத்தியக் கூறுகள் பற்றி எடுத்துக்காட்டி,வழங்கக்கூடிய சேவை மற்றும் அதன் திறன் குறித்து அரசாங்கத்திற்குத் தெரிவிக்கப்பட்டால், அதை மிகவும் பயனுள்ள இடங்களுக்கு அனுப்ப தேவையான வழிகாட்டுதலையும் ஒருங்கிணைப்பையும் வழங்க முடியும் என்று ஜனாதிபதி தெரிவித்தார்.


பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும்போது, ​​அனைத்து தரப்பினரும் சிறந்த ஒருங்கிணைப்புடன் ஒரு தேசிய வேலைத்திட்டத்தின் மூலம் செயல்படுவதன் ஊடாக, மிகவும் செயற்திறன் மிக்க வகையில் அந்த நன்மைகளை மக்களுக்கு வழங்க முடியும் என்று மேலும் சுட்டிக்காட்டினார்.





பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பணிகள் குறித்து அரச சார்பற்ற அமைப்புகளின் பிரதிநிதிகளுடனான சந்திப்பில் ஜனாதிபதி Reviewed by www.lankanvoice.lk on நவம்பர் 29, 2025 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice Media Network © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.