சுயாதீன ஊடகவியலாளர் போரத்தின் ஏற்பாட்டில் ஸாஹிறா வலது குறைந்தோர் பாடசாலையில் இடம்பெற்ற உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு
-எம்.எச்.எம்.அன்வர்-
சுயாதீன ஊடகவியலாளர் போரத்தின் ஏற்பாட்டில் காத்தான்குடி கிழக்கிலங்கை ஸாஹிறா வலது குறைந்தோர் பாடசாலையில் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு தலைவர் எம் .ஏ .சி எம். ஜலீஸ் தலைமையில் இன்று 17.7.2019 இடம்பெற்றது
பாடசாலை அதிபர் அன்வர் சாதிக் அவர்களி்ன் பங்குபற்றுதலுடன் சுயாதீன ஊடகவியலாளர் போரத்தின் செயலாளர் ஏ. எல். டீன் பைறூஸ் உப செயலாளர் எம். ஹிஸாம் உட்பட உறுப்பினர்கள் கலந்து சிறப்பித்தனர்
மேற்படி நிகழ்வில் எதிர்காலத்தில் இப்பாடசாலைக்கு தேவையான வழங்களை பெற்றுக்கொள்ள முயற்சிப்பதாகவும். பாடசாலை அதிபர். ஆசிரியர்களின் பணி அளப்பெரியது என போரத்தின் செயலாளர் ஏ.எல் டீன் பைறூஸ் இதன்போது தெரிவித்தார்
அத்துடன் போரத்தினால் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டதுடன் கலந்துகொண்ட உறுப்பினர்களால் அதிபரிடம் உபகரணங்கள் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
சுயாதீன ஊடகவியலாளர் போரத்தின் ஏற்பாட்டில் ஸாஹிறா வலது குறைந்தோர் பாடசாலையில் இடம்பெற்ற உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு
Reviewed by www.lankanvoice.lk
on
ஜூலை 17, 2019
Rating:
கருத்துகள் இல்லை: