காத்தான்குடி ஆதார வைத்தியசாலயை முழுமையாக இயங்க வைக்க துரித நடவடிக்கை
கொரோனா சிகிச்சை நிலையமாக தற்போது தொழிற்படும் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையை காத்தான்குடி மக்களின் அவசிய தேவை கருதி வைத்தியசாலையின் அதே கட்டடத்தில் வைத் தியசாலையின் சகல பிரிவுகளையும் இயங்க வைக்க மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அல்ஹாபிழ் நஸீர் அஹமட் துரித நடவடிக்கை எடுத்து வருவதாக முன்னாள் மாகாண சபை உறுப்பினர் முபீன் தெரிவித்தார்.
கடந்த 8/3/2021 திங்கட்கிழமை காத்தான்குடி பிரதேச செயலகத்தில் நடைபெற்ற விஷேட அபிவிருத்திக் கூட்டத்தில் வைத்தியசாலை கொரோனா சிகிச்சை நிலையமாக செயற்படுவதால் காத்தான்குடி மக்கள் எதிர்நோக்கும் சுகாதார ரீதியிலான பிரச்சினைகள் பாராளுமன்ற உறுப்பினர் நஸீர் ஹாபிஸின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு இவ்விடயத்தில் துரித நடவடிக்கை எடுக்குமாறு
காத்தான்குடி ஆதார வைத்தியசாலை அத்தியட்சகர் டாக்டர் ஜாபிர், பள்ளிவாயல்கள் சம்மேளனப் பிரமுகர்கள் மற்றும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் முபீன் ஆகியோரினால் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
இவ்விடயம் தொடர்பில் கொழும்பில் சுகாதார அமைச்சின் உயர்மட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு பாராளுமன்ற உறுப்பினரால் கொண்டு செல்லப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படடு வருவதாகவம் இவ்விடயம் தொடர்பில் சுகாதார அமைச்சின் உயர் அதிகாரிகள் காத்தான்குடிக்கு விரைவில் விஜயம் செய்ய உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ஹாபிஸ் தன்னிடம் தெரிவித்தாக முபீன் மேலும் தெரிவித்தார்.
காத்தான்குடி ஆதார வைத்தியசாலயை முழுமையாக இயங்க வைக்க துரித நடவடிக்கை
Reviewed by www.lankanvoice.lk
on
மார்ச் 12, 2021
Rating:

கருத்துகள் இல்லை: