விபத்து தொடர்பில் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டாரவின் மகன் கைது செய்யப்பட்டுபிணையில் விடுதலை
ஆனால், அவரது சாரதி அனுமதிப் பத்திரத்தை தற்காலிகமாக ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த விபத்து இன்று (29) அதிகாலை 4.30 மணியளவில் கருவலகஸ்வெவ மீஓயாவிற்கு அருகில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டாரவின் மகன் யசோத ரங்கே பண்டார பயணித்த கார் முன்னால் வந்த முச்சக்கர வண்டியுடன் மோதியுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த முச்சக்கரவண்டி சாரதி, புத்தளம் ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்தின் போது கார் மற்றும் முச்சக்கர வண்டியின் சாரதிகள் மாத்திரமே பயணித்துள்ளனர்.
விபத்து தொடர்பில் பாலித ரங்கே பண்டாரவின் மகன் யசோத ரங்கே பண்டார கருவலகஸ்வெவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து, சந்தேகநபரை 5 இலட்சம் ரூபா பிணையில் விடுவிக்குமாறு புத்தளம் பதில் நீதவான் உத்தரவிட்டார்.
யசோதா ரங்கே பண்டார கடந்த 2018 ஆம் ஆண்டு இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: