17 மாவட்டங்களில் சீரற்ற காலநிலை: 22,620 பேர் பாதிப்பு!
நுவரெலியா, கண்டி, பதுளை, குருணாகல், காலி உட்பட நாட்டில் 17 மாவட்டங்களில் நிலவும் கடும் மழையுடன் கூடிய சீரற்ற காலநிலையால் 5, 579 குடும்பங்களைச் சேர்ந்த 22, 620 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சீரற்ற காலநிலையால் நால்வர் உயிரிழந்துள்ளனர்.
வெள்ளம், மண்சரிவால் 2 வீடுகள் முழுமையாகவும், 697 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளன என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீரற்ற காலநிலையால் காலி மாவட்டத்திலேயே அதிகளவானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிட்டத்தக்கது. எட்டு குடும்பங்களைச் சேர்ந்த 30 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.
17 மாவட்டங்களில் சீரற்ற காலநிலை: 22,620 பேர் பாதிப்பு!
Reviewed by www.lankanvoice.lk
on
அக்டோபர் 25, 2025
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
அக்டோபர் 25, 2025
Rating:

கருத்துகள் இல்லை: