Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

அம்பாந்தோட்டை மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தில் வனசீவராசிகள் அலுவலகமொன்றை நிறுவ அரசு திட்டம்


அம்பாந்தோட்டை மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலைய வளாகத்தில் காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் உள்நுழைவதால் அதன் நுழைவு வீதிகள் ஊடாக பாதை மாறுதல் போன்ற காரணங்களால் விமான நிலையத்தின் உட்கட்டமைப்பு வசதிகளில் பாதிப்புக்களை ஏற்படுத்துகின்ற சந்தர்ப்பங்கள் அதிகமாகக் காணப்படுவதுடன், விமான நிலைய நடவடிக்கைகளுக்குப் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன. 


வ்வாறு உட்கட்டமைப்பு வசதிகளுக்கு ஏற்படுகின்ற பாதிப்புக்களை சீர்செய்வதற்காக வரையறுக்கப்பட்ட விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் (இலங்கை), (தனியார்) கம்பனிக்கு ஏற்படுகின்ற செலவுகள் குறிப்பிடத்தக்களவு அதிகரித்துள்ளது. அதனால், அவ்வாறான காட்டு விலங்குகளின் அச்சுறுத்தல்களை முற்கூட்டியே அடையாளங் கண்டு சரியான வகையில் முகாமைத்துவம் செய்து விமானப் பயணிகளின், விமான நிலையப் பணிக்குழாமினர் மற்றும் விமான நிலைய உட்கட்டமைப்பு வசதிகளை உறுதிப்படுத்துவதற்கும், 

விமான நிலைய நடவடிக்கைகளில் ஏற்படக்கூடிய தாமதங்கள் மற்றும் இடையூறுகளை குறைத்து தங்குதடையின்றிய விமான சேவைகளை பேணிச் செல்வதற்கும் இயலுமாகும் வகையில் அம்பாந்தோட்டை மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தில் விசேட வனசீவராசிகள் அலுவலகமொன்றை நிறுவுவதற்காக சுற்றாடல் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அம்பாந்தோட்டை மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தில் வனசீவராசிகள் அலுவலகமொன்றை நிறுவ அரசு திட்டம் Reviewed by www.lankanvoice.lk on அக்டோபர் 08, 2025 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice Media Network © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.