சில மாசங்களுக்கு முன் சொந்த ஊரிலேயே, 50-பேரை கூட, திரட்ட முடியா நிலையில், இருந்த நாமல் கட்சி, இன்று UNP, SLFP உடன் சேர்ந்து, தம் பலத்தை காட்டி உள்ளது.
நுகேகொடை கூட்டம் தொடர்பில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசனின் முகநூல் பதிவு வருமாறு,
சில மாசங்களுக்கு முன் சொந்த ஊரிலேயே, 50-பேரை கூட, திரட்ட முடியா நிலையில், இருந்த நாமல் கட்சி, இன்று UNP, SLFP உடன் சேர்ந்து, தம் பலத்தை காட்டி உள்ளது.
என் வீட்டில் இருந்து நடை தூரம், நுகேகொடை சந்தி. நடக்காமல், நேரடி தகவல்.
கூட்ட ஏற்பாட்டாளர் பலமுறை நமது கட்சிக்கு அழைப்பு விடுத்தார்கள். நமக்கு “சரி வராது Bro” என மறுத்து விட்டோம்!
இது, அரசுக்கு சவால் விடும் கூட்டம் என்பதை விட, தேசத்தின் பிரதான எதிர் கட்சி யார் என நிலை நாட்டுவதே அங்கே முதல் கனவு!
இதன் மூலம் இங்கே கூடிய சிங்கள (பெளத்த) மகாஜனம், சில செய்திகளை தந்தது.
(1)2019ல் கோதாவுக்கும், பின் 2024ல் அனுரவுக்கும் வாக்களித்த, அதே 69 இலட்சம், விரும்புனா, தாய் வீடு திரும்பலாம். எந்நேரமும் மாறலாம். மாறாமலும் விடலாம். எப்படியும், இங்கே நாம் தான் எஜமானர்.
எங்கள் “தேசாபிமானம்” தான் இங்கே “பிரைம் சப்ஜெக்ட்”!
(2)சிறுபான்மை சில்லறைகள் மூடி-கொண்டு வேடிக்கை பார்க்கனும்! அல்லது ஓரமா போய் விளையாடனும்!
(3)பாராளுமன்ற, எதிர்கட்சி தலைவரான சஜித், இப்படி ஒரு கூட்டத்தை, வெளியே கூட்டி காட்டும் வரை, நாட்டிலே நாமல் தான் “ஒபொசிசன் லீடர்”!
Reviewed by www.lankanvoice.lk
on
நவம்பர் 22, 2025
Rating:


கருத்துகள் இல்லை: