Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

தமிழ் மற்றும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுடனான கலந்துரையாடல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்த ஆண்டு டிசம்பரில் நடைபெறவிருக்கும் இலங்கை தினத்திற்காக தற்போது திட்டமிடப்பட்டுள்ள நிகழ்ச்சித்திட்டங்கள் குறித்து எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலில் ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (22) பிற்பகல் நடைபெற்றது.



அனைத்து மத மற்றும் கலாசார அடையாளங்களையும் மதித்து, இந்த நாட்டின் ஒவ்வொரு பிரஜைக்கும் சுதந்திரமாக வாழ வாய்ப்பு இருக்க வேண்டும் என்றும், நமது நாடு எந்தவொரு இனவாத வலையிலும் சிக்குவதற்கு இடமளிக்கப்பட மாட்டாது என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.



அதற்காக அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டத்திற்கு அனைவரும் ஆதரவளிக்குமாறு ஜனாதிபதி அழைப்பு விடுத்தார்.
சமூகங்களுக்கிடையில் புரிந்துணர்வை ஏற்படுத்துவதன் மூலம் நல்லிணக்கத்துடன் கூடிய இலங்கையை உருவாக்கும் தொலைநோக்குப் பார்வையுடன், அனைத்து சமூகங்களையும் ஒன்றிணைத்து இலங்கை தினம் கொண்டாடத் திட்டமிடப்பட்டுள்ளது.



இது தொடர்பாக அனைத்து சமூகங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களின் கருத்துகளும் பரிந்துரைகளும் இங்கு வினவப்பட்டதுடன், இந்த நடவடிக்கைகள் குறித்த கலந்துரையாடலில் பங்கேற்ற அனைத்து பிரதிநிதிகளாலும் இந்த நிகழ்ச்சித் திட்டம் பெரிதும் பாராட்டப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.


மேலும், அனைவரும் ஒன்றிணைந்து செயல்படக்கூடிய வகையில் நிகழ்ச்சிகளையும் செயற்திட்டங்களையும் உருவாக்குமாறு ஏற்பாட்டுக் குழுவிற்கு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.
தமிழ் மற்றும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுடனான கலந்துரையாடல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. Reviewed by www.lankanvoice.lk on நவம்பர் 22, 2025 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice Media Network © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.