Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

சுதந்திர ஊடக கண்காணிப்பு மையத்தின் ஏற்பாட்டினில் காத்தான்குடி கோட்ட பாடசாலை மாணவர்களுக்கான செயலமர்வு..

(ஏ.எல்.டீன் பைரூஸ்)
கொழும்பினை தலையகமாகக் கொண்டு இயங்கும் சுதந்திர ஊடக கண்காணிப்பு மையத்தின் ஏற்பாட்டில் நவீன தொடர்பாடலும் ஊடகக் கல்வியும் எனும் தலைப்பில் பாடசாலை மாணவர்களுக்கான செயலமர்வு  (06.03.2024 புதன் கிழமை) புதிய காத்தான்குடியில் அமைந்துள்ள மர்ஹூம் சேகுல் பலாஹ் கல்வி நிலைய  மண்டபத்தில் சுதந்திர ஊடக கண்காணிப்பு மையத்தின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் ஊடகவியலாளர் கலாநிதி NM.பாயிஸ் ஒருங்கிணைப்பில் இடம் பெற்றது.


ஊடக  மையத்தின் பொதுச் செயலாளர் Mr. Ibransa faurudeen தலைமையில் இடம் பெற்ற இச் செயலமர்வில் சிரேஷ்ட ஊடகவியலாளர் எம் நெளஷாத் மொஹிதீன் வளவாளராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு விரிவுரை ஆற்றினார்.



நிகழ்வின் பிரதம அதிதியாக காத்தான்குடி கோட்டக் கல்விப் பணிப்பாளர் AGM.Hakeem கலந்து கொண்டு செயலமர்வில் 
ஆரம்பித்து வைத்தார்.


மேலும் இச் செயலமர்வில் காத்தான்குடி கோட்ட பாடசாலையைச் சேர்ந்த 120
 மாணவர்கள் பங்குபற்றியதோடு பாடசாலை ஆசிரியர்களும் மாணவர்களுடன் சமூகமளித்து இருந்தனர்.


ஊடகவியலாளர் ஹிசாமின்  
நெறிப்படுத்தலுடன் மேற்படி நிகழ்வு சிறப்பாக  நடைபெற்றதுடன் ஊடகவியலாளர்களான  NM.Faiz, ALM.Hizam, UA.Rahman ஆகியோரின் பங்களிப்பு பாராட்டத்தக்கது.


நவீன தொடர்பாடலும் ஊடகக் கல்வியும் எனும் தொனிப் பொருளில் இச் செயலமர்வு இடம் பெற்றது.









 
 


சுதந்திர ஊடக கண்காணிப்பு மையத்தின் ஏற்பாட்டினில் காத்தான்குடி கோட்ட பாடசாலை மாணவர்களுக்கான செயலமர்வு.. Reviewed by www.lankanvoice.lk on மார்ச் 06, 2024 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice media © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.