Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

  

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் தேசிய சுதந்திரதின நிகழ்வு கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஹக்கீம் தலைமையில் காத்தான்குடியில் இடம் பெற்றது.


(ஊடகவியலாளர்
AL.டீன் பைரூஸ்)
மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் ஏற்பாட்டில் 77 வது தேசிய சுதந்திரதின நிகழ்வு காத்தான்குடி கோட்டக் கல்விப் பணிப்பாளர் AGM.ஹக்கீம் தலைமையில் காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தினில் மிகவும் சிறப்பாக இடம் பெற்றது.


நிகழ்வின் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மத்தி வலயத்தின் கல்விப் பணிப்பாளர் எம்.எம்.ஜவாத் கலந்து கொண்டு சிறப்பித்தார்.


மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட காத்தான்குடி, ஏறாவூர்,
ஓட்டமாவடி ஆகிய மூன்று கோட்டங்களை சேர்ந்த சுமார் 1000க்கும் மேற்பட்ட மாணவர்களின் பங்கு பற்றுதலுடன் இடம் பெற்ற மேற்படி நிகழ்வில் சாரணர் அணிவகுப்பு, பேண்ட் வாத்தியம்,சமாதான வாகன ஊர்தி, மாணவ அணிவகுப்பு என பல நிகழ்வுகள் இடம் பெற்றன.


பல் சமயத் தலைவர்களின் ஆசியுடன், மாணவர்கள் தேசியகீதம் இசைக்க,
பிரதம அதிதியினால் தேசியக் கொடி ஏற்றப்பட்டது.


நிகழ்வில் காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, கல்வி அதிகாரிகள் , உலமாக்கள்,ஊர் பிரமுகர்கள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள்,
கல்வியாளர்கள்,ஊடவியலாளர்கள்,பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டதுடன், நிகழ்வுகள் யாவும் வலயத்தின் உதவிக் கல்விப் பணிப்பாளர் 
AL.பாரூக் அவர்களின் நேறிப்படுத்தலின் கீழ் இடம் பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.















\














மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் தேசிய சுதந்திரதின நிகழ்வு கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஹக்கீம் தலைமையில் காத்தான்குடியில் இடம் பெற்றது. Reviewed by www.lankanvoice.lk on பிப்ரவரி 04, 2025 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice Media Network © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.